Thursday, August 27, 2009

மனக் கூப்பாடு

முந்தி செய்த தவறெல்லாம்
தயக்கம் காட்டாமல்
நடுவே கொட்டிச் செல்கிறது
நியாபக அடுக்குகளை

’வாசிப்பு’ அவற்றை
தவறில்லை என்றுடினும்
’சுற்றம்’ சளைக்காமல்
வேதனை படுத்துகிறது

எத்தனை முறை
பிய்த்து கொடுத்தாலும்
வந்து தொலைக்கிறது
இந்த (நொந்த)காதல்
பல சமயம் சுகந்த.

கடைசியில் மிஞ்சுவதும்
காதலியல்ல காதலே

கமல் பேசுவதை கேட்கும்போது
தன்நம்பிக்கை வருது
ரஜினியை பார்க்கும்போது
தெய்வ நம்பிக்கை!
கமல் ரஜினியென்றே தாவுது
மனம் எனும் வஸ்து
நிலையில்லாமல்

நிலையற்று இருப்பதுதான்
வாழ்வின் ருசியோ....?

இல்லை என் அம்மா செய்யும்
சப்பாத்தியோடு உருளைகிழங்கு
சப்ஜிதான் ருசியோ...?

Saturday, August 15, 2009

விசித்திர நொடிபொழுதுகள்

மேல் உதடுகளும்,
கீழ் உதடுகளிலும் ஆழ்ந்து
பல மணித்துளிகள்
சேர்ந்திருந்தபோதும்
மறுநாள்
மனம்
சேராமல்
போவதென்ன?


கிறுக்கு
கவிதைகளின் வால் பிடிக்க
அவள் என் தோள் பிடிக்க
காதல் பீடிக்க
சடுதியில் காமம் பீறிட
சட்டென துளிர்ந்த வெட்கம்
உள்ளுக்குள்ளே பூ பறிக்க
முகர்ந்தே கண்ணம் கரைக்க
சாத்தானும் கடவுளும்
பாதி பாதியாய் எங்களுள்
புகுந்து பட்டையை கிளப்ப
இதோடு நான் நிறுத்த
அடையுங்கள் ஆசுவாசம்