Thursday, May 5, 2011

பதிவர்களும் சில மேட்டர்களும்




இலக்கியவாதிகள்: comments are closed, இவர்கள் டீவியில் தலை காட்டுவார்கள்... அப்புறம் டீவியையே விமர்சிப்பார்கள். டீவியை பார்த்ததே இல்லையென சத்தியம் செய்வார்கள். உலகின் தலை சிறந்த கவிதையென்று ஒரு பெரிய சிறுகதையை கொடுத்து கான்சல் பண்ணுவார்கள். நான் அவர சொல்லல.. சும்மா பொதுவாதான் சொன்னேன். யாருக்கும் கமெண்ட் இட மாட்டார்கள்.

அடுத்த நிலை இலக்கியவாதிகள்: இவர்களின் comments box ஓப்பனில் இருக்கும் ஆனால் இவர்கள் தப்பி தவறி கூட மற்றவர்களுக்கு கமெண்ட் போட மாட்டாங்க... (அ சொல்லல)

பதிவர்களில் பிரபலம்: இவர்கள் ரொம்ப occasionalla மத்தவளுக்கு கமெண்டிடுவார்கள். அதுவும் - ஸ்மைலி ஆங் சூப்பர் - இத்தியாதிகள்.... 6 மாதத்திற்கு ஒரு முறை கமெண்டிடுவார்கள்.(நர்சிம்ம சொல்லல)

ரொம்ப பிரபல பதிவர்கள்: இவர்களும் யாருக்கும் கமெண்ட் போட மாட்டார்கள்.. தெருவில் நாம மரியாதைக்கு பேச முற்பட்டால் பெரிய லாடு லபக்கு தாஸ்ஸாட்டும் கிளம்பிவிடுவார்கள்... சில பிரபலங்கள் மதிச்சு பேசுவாங்கப்பா(அது அதிஷா தான்)

தைய்யா தக்கா பதிவர்கள்: இவர்கள் ஒரு குருப்பா அலைவார்கள்.. ஏமாந்த எவனாவது சாதரணமா எதாவது சொன்னாலும் ஊதிபெரிசு படுத்துவார்கள்... இவங்க குருப்பல பெரிய லெவல்ல கோல்மால் நடந்த பிறகு... I humbly request ன்னு பம்மாத்துவார்கள்.

புதிதாய் பிரபலமாகும் பதிவர்கள்: இவர்கள் ப்ளாக்ல கமெண்டு போட மாட்டார்கள்... ஆனால் சேட்டிங்கிள் வந்து பிச்சிட்டிங்க பிசஞ்ட்டீங்கனு பகருவார்கள்... கமெண்டு போட டைம்மில்ல என்பார்கள்.


ரவுடி பதிவர்கள்:
கடவுள் என்பன் யார்?. அவன் என்ன எங்க வூட்ல மாவாட்டினா, களை பறித்தானா என்று சவுண்டுவுடுவார்கள்.. அப்புறம் ஹோட்டல் வெச்சிட்டு செட்டில் ஆகிடுவாங்க... யார் அந்த வால் பதிவர்ன்னு கேக்ககூடாது.

மிகவும் பிஸியான பதிவர்கள்: எப்போதும் பிஸியா டீவிட்டர், பேஸ்புக், பஸ் என்று எப்போதும் பிஸியா இருப்பாங்க... அடிக்கடி போட்டோவ மாத்துவாங்க... கவித எழுதுவாங்க..(வாசு தண்டோரா என நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.)

சுவையான பதிவர்கள்: ரொம்ப பிரமாதமா எழுதகூடியவங்க ஆனால் பாருங்க எழுதாமல் பண்ண வைச்சுடுது இயற்கை. அதுலயும் R.P.ராஜநாயஹமெல்லாம் தொடர்ந்து எழுதியிருந்தால் பெரிய இலக்கியவாதிங்க பிளாக்கே ஆட்டம் கண்டுபோயிருக்கும். இதுல லேடிஸ் காலேஜ் வாசல்ல போய் நிக்கற நேரத்தல ஒரு பதிவு எழுதலாம் இருந்தாலும் நேரமில்லைன்னு பதிவு எழுதறது இல்ல இந்த ஆஞ்சனேயா... சே சே அது அனுஜன்யா இல்லங்க. பட்டர்பிளை சூர்யாவின் உலக சினிமா காத்து வாங்குதுங்க. சுவையான பதிவர்கள் லிஸ்ட்ல என் பேர சேர்க்க சொல்லி நீங்கல்லாம் கத்தறது கதறது எல்லாம் எனக்கு கேக்குதுங்க. விடுங்க எனக்கு தற்புகழ்ச்சியெல்லாம் புடிக்காது.


சில கவிஞர்கள் பதிவு எழுதிட்டு கமெண்டு போடலன்னா உதைப்பேன்னு மிரட்டுவாங்க... அவங்க பேரா...? அட அவங்க என் நண்பருங்க.. அதனால உட்டுருவோம் அவங்க பேர.

போரடிச்சுடுச்சு...அட எனக்குதாங்க.. பிறகு வேறேதாவது தலைப்புல பாக்கலாம்.. பை.