Showing posts with label சம்பாஷனை. Show all posts
Showing posts with label சம்பாஷனை. Show all posts

Wednesday, July 14, 2010

உதை




அன்பே எப்படி இருக்கிறாயடி.. பணிக்கு கிளம்பவில்லையா...

கிளம்பிட்டேயிருக்கேன் அதான் பேச வரலை..அப்பாக்கு எப்டியிருக்கு?

மிகவும் நன்றாக உள்ளாரடி... இன்னும் சில காலம் இருப்பார் என்பது மகிழ்ச்சியே மனதுக்கு...

செம்மொழி மாநாடு வந்த அப்புறம் ஒரு மாதிரிதான் இருக்கீங்க

நீ கூறிய இரு பாடல்களின் வரிகளே காரணம்

ஒ.. ஒ.. ஆளபாரு

அப்பறம் உனை பிரிந்துருகும் பசலையும் ஒரு காரணி

உதைவிழும் ஒழுங்கா வேலையை பாருங்க.. எப்பவும் lol

நீ ’உதை’ என்பதும் சந்துருஷ்டியே தருகிறது.. காதல் ஒரு மாயப்பேயே

காதல் கத்திரிக்கா..!

இல்ல தக்காளி..

எதுக்கு சாம்பார் பண்ணவா..?

இல்ல கடிச்சு சாப்பிடத்தான்.. பெங்களூர் தக்காளியடி உன் கண்ணம்.. உயிரே உயிரே...

பாட்டு நல்லாயிருக்கா...?

நீ எந்த பாடலை குறிப்பிட்டாலும் அது நல்லாதான்யிருக்கும்.. ஏன்னா இதுல நம்ம டேஸ்ட் ஒத்து போகுது...(வேற ஒரு விஷயத்தில் மட்டும்)

ம்ம்... ஆனா என்னை திட்டினிங்க...

பொண்டாட்டிய புருஷன் திட்டாமா வேற எந்த நாய் திட்டும்

உங்கள திருத்த முடியாது... சாப்பிட்டிங்களா?

மொத மொத உன்னை சந்திக்கும் போது நல்ல காதல் பாட்டுதான் ஓடிச்சு.. அப்போ சத்தியமா நான் நினைக்கல.. எனக்கு பிடிச்சமானவள சந்திக்கறன்னு

ஐய்யோ ஐய்யோ தாங்கல

ஏன் திருந்தனும்.. உன்னை நினைச்சு இருக்கறதே சந்தோஷம்தான்.. சாப்பிட்டேன்.... நீ

இல்ல office போயிட்டு அப்புறம்

ஒ... I love u di

அப்படியே எப்பவும் அன்பா இருந்தா சந்தோஷம்

Thank you darling… ஏன் சில சமயம் நான் அன்பா இல்லையா?

ஆன்லைன்ல் இருக்கும்போது பேசமாட்றீங்க...

ஆபிஸ்ல ஜிமெயில் ஒபன் பண்ணிவெச்சிட்டு வேலையே பார்க்கவேண்டியதுதான்... நிறைய பொறுப்புகள் இரு வேலை பல நிலை... பேயிங் வெல் so working hard

ம்ம்ம் அப்படின்னா சரிதான்.. வேலைதான் முக்கியம்

கவித மனசே காணாமல் போயிடுச்சு... அப்ப அப்ப உன் ஞாபகம்தான் அத மீட்டெடுக்குது

ஒழுங்கா சாப்பிடுங்க சந்தோஷமா இருங்க...

சரி நான் போறேன்(போயிட்டு வர்றேன்)

ஓகே டார்லிங் டேக் கேர்..

பதிவு போடுங்க... நினைக்கறதே எழுதுங்க..

அதுக்கு நீ முத்தம் கொடுக்கனும்

(அதுக்கு அவள் சொன்ன பதில்தான் தலைப்பூ)