Showing posts with label புரியும் கவிதைகள். Show all posts
Showing posts with label புரியும் கவிதைகள். Show all posts

Sunday, December 25, 2011

ஏசுவே எந்தன் கர்த்தாவே



சொல்லிக்கொள்ளாமல்
ஞானஸ்தானம்
வாங்கினாள்
சகோதரி

முன்னம் சொல்லியிருந்தாள்....
ஆனால் அது
இன்றென பகரவில்லை

யேசுவே எந்தன் கர்த்தாவே
உனக்கு ஸோஸ்த்திரம்
நல்லவேளை நீங்கள்
எங்க சொந்தக்காராக இருக்கவில்லை
இல்லையெனில் எப்படி என் தங்கை
உன்னை நேசிப்பால்

கலியுக கர்ணன் கிருத்துவத்தையே ஏற்றிருப்பான்
துரியோதனை விடுத்து
சமய சங்(கி/கொ)லிகள் பாடாய் படுத்துகிறது

காசுகாக மாறுகிறார்கள்
என அச்சு பிச்சென
எல்லா இந்திய சாதியும் சொல்லுகிறது
ஆப்பிரிக்காவிலும் இப்படி சொல்லக்கூடும்...
என்ன செய்ய
ஏசுவே எந்தன் கர்த்தாவே என்னை ஆதரி

- இயேசு: என் கிருபை உனக்குப் போதும் – 2கொரி.12:9

Sunday, June 6, 2010

சின்ன சின்ன வார்த்தைகள்




அவரை தெரியுமென்றான்
இவரை தெரியுமென்றான்
உன்னை உனக்கு தெரியுமா?
என கேட்க நினைத்து மௌனமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் என்னை!


சில சமயங்களில் அவள் கன்னங்களை
தாண்டி சிந்திக்க இயலவில்லை
பல சமயங்களில் அவள் கரங்களை
விடுத்து தெளிவேதுமில்லை


தவறவிட்ட விஷயங்கள்
கனவில் துறத்தும்
வார்த்தைகளை கழட்டிபோட
நெஞ்சுபாரம் குறையும்


கடந்துக்கொண்டிருக்கும்போதே
கடந்துவிட்ட உணர்வு
கடக்கையில் நானற்ற உணர்வு


நிறைய படித்து தள்ளுகிறேன்
கவலையே இல்லை
ஏனெனில்?
எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி