Tuesday, March 31, 2009

கடவுள்


தெய்வநம்பிக்கை
உண்டு
பெரும்பாலான
சமயங்களில்

Monday, March 30, 2009

நம்பிக்கை




நாள்தோறும் தவறவிட்ட பேருந்தாய் வாழ்க்கை
சலனங்களின் தோரணங்களாய் மனதின் சுவாசம்
எறும்பின்மேல் வெல்லக்கட்டியாய் சுமைவண்டிகள்
தூரத்தே கண்சிமிட்டும் நட்சத்திரவானம்

ஆழி சூழ்

எழுதியதில் மிஞ்சவில்லை
எதுவும் கவிதையென
விளக்கனைத்து கண்மூடியபின்
எனை சூழ்ந்தன
வார்த்தை பிசாசுகள்

Saturday, March 28, 2009

ம்ம்ம்

எழுத தூண்டுவது எது?
தரித்ரத்தை பிணைத்துக்கொள்வது ஏன்?
தொடங்கும் போதே முடிந்து போகிறது
ஒவ்வொரு கவிதையும்
வழக்கம்போல்

ஏதோ ஒன்னு

மாண்டு போக ஆசை தான்
மரணம் பற்றிய ருசியும் தெரியவில்லை
தெரிந்தவர் யாரேனும் சொல்லலாம்
வாழ்வே தேவலாமுன்னு

Wednesday, March 18, 2009

சுடும் நீர்


வலியின் மிச்சம்
காய்ந்த இரு
வரிகள் கன்னத்தில்