கவிதை தொட்ட கைகளில்
காமனை தொடமாட்டேன்
என பகர்ந்தேன்
காதலி எனை இழுத்து
அழுத்தமாய் உதட்டில்
முத்தமிட்டால்
இனி கவிதை எழுத்தில் இல்லை
அவள் உதடுகளில்
Sunday, September 20, 2009
Sunday, September 13, 2009
சுமையென சுமை அல்லது வீடு திரும்புதல்
நாள் பொழுதும் உழைத்த
அவள் தலை சும்மாட்டில்
பொருட்கள் கொண்ட பாண்டு
வளைத்து சுற்றிய
புடவையில் குழந்தை
சாயந்திர நேர்வெய்யில்
முகத்தில்
செருப்பில்லா கால்கள்
ஏனோ தெரியவில்லை
ஏஸி குளிரில் உட்கார்ந்து
பார்த்த எனக்கு
குதத்தில் வலித்தது
பிட்சா சரியில்லையென
நண்பர்கள் சொல்லும் போதெல்லாம்
இவர்களை நினைக்க
தோன்றுகிறது - ஏனோ தெரியவில்லை!
அவள் தலை சும்மாட்டில்
பொருட்கள் கொண்ட பாண்டு
வளைத்து சுற்றிய
புடவையில் குழந்தை
சாயந்திர நேர்வெய்யில்
முகத்தில்
செருப்பில்லா கால்கள்
ஏனோ தெரியவில்லை
ஏஸி குளிரில் உட்கார்ந்து
பார்த்த எனக்கு
குதத்தில் வலித்தது
பிட்சா சரியில்லையென
நண்பர்கள் சொல்லும் போதெல்லாம்
இவர்களை நினைக்க
தோன்றுகிறது - ஏனோ தெரியவில்லை!
Thursday, September 10, 2009
வானம் தேடுதல்
Friday, September 4, 2009
சிதறிய கவிதை துண்டுகள்
சிலர் கவிதை படைப்பதும்
சிலர் கவிதை வெறுப்பதும்
கவிதைதான்
அள்ள அள்ள குறையவில்லை
பாத்திரத்தில் நீர்
மேலே திறந்த குழாய்
குக்கர் குழந்தை
காலிங்பெல் தொலைபேசி
குரல் கொடுக்க எல்லாவற்றுக்கும்
மறுகுரல் கொடுத்தாள்
மனைவி
சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி
புரிதலை நோக்கி
சிந்திக்கொண்டிருக்கும்
மழை மனது
மழை பரப்பும்
வாசனை திரவியம்
திட்டு திட்டாய்
வெளிச்ச வானமாய்
கருமேக கூட்டம்
மண்னை நனைத்து பின்
மேலோடி போகும்
நீர் போல
சுவைத்து சப்பிய
மாம்பழக் கொட்டை
சிலர் கவிதை வெறுப்பதும்
கவிதைதான்
அள்ள அள்ள குறையவில்லை
பாத்திரத்தில் நீர்
மேலே திறந்த குழாய்
குக்கர் குழந்தை
காலிங்பெல் தொலைபேசி
குரல் கொடுக்க எல்லாவற்றுக்கும்
மறுகுரல் கொடுத்தாள்
மனைவி
சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி
புரிதலை நோக்கி
சிந்திக்கொண்டிருக்கும்
மழை மனது
மழை பரப்பும்
வாசனை திரவியம்
திட்டு திட்டாய்
வெளிச்ச வானமாய்
கருமேக கூட்டம்
மண்னை நனைத்து பின்
மேலோடி போகும்
நீர் போல
சுவைத்து சப்பிய
மாம்பழக் கொட்டை
Tuesday, September 1, 2009
துரோகம்
துரோகங்கள் நிறைந்த வாழ்க்கையை
நான் ஆராதிக்கிறேன்
ஏன்னெனில்….
துரோகமே நிலையாகிபோன
உலகிலே
துரோகம் செய்வதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
வலியும் உண்டு
கவிதை எழுதுதல்
வேண்டியவரை அழகான
வார்த்தைகளை கொண்டு செதுக்கி
புரட்சி பகடி என கலகம்செய்து
கர்ப்பிணி, சாடல், இயற்கை
பெண்மை, மழைச்சாரல்,
போன்ற தலைப்புகளில்
எனக்குண்டான பாடல்களை
எழுதி கவர்கிறேன்
இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.
நான் ஆராதிக்கிறேன்
ஏன்னெனில்….
துரோகமே நிலையாகிபோன
உலகிலே
துரோகம் செய்வதில்தான்
உண்மையும் மிகுழ்ந்த
வலியும் உண்டு
கவிதை எழுதுதல்
வேண்டியவரை அழகான
வார்த்தைகளை கொண்டு செதுக்கி
புரட்சி பகடி என கலகம்செய்து
கர்ப்பிணி, சாடல், இயற்கை
பெண்மை, மழைச்சாரல்,
போன்ற தலைப்புகளில்
எனக்குண்டான பாடல்களை
எழுதி கவர்கிறேன்
இதை எதையுமே செய்யமுடியாத
தேமேன்னு மற்றவரை
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நானாகிய நான்.
Subscribe to:
Posts (Atom)