Sunday, March 25, 2012

ஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்




வாழும் வனத்தில்
எத்தனை மிருகங்கள்
எனையும் சேர்த்து

சோர்ந்துவிடாமல்
துயரங்கள் கவனமாய்
பார்த்துக்கொள்கிறது

இருதயத்தின் கேவல்களை
கேட்டுக்கொண்டிருந்தால்
கேந்திரத்தின் மாயவெளி
எட்டாமல் மறக்கும்

கடைசி ஆணாய் வாழவிருந்தால்
சமையல் உன் கடவுள்
பெண்ணாய்? – காத்து படைப்பதனால்
அவளுக்கு திமிரே போதுமானது
போனாபோகிறது என
ஒரு ஆணை கொடுப்போம்
படைத்தலுக்கு எதிராய் வார்த்தைகள்
யான் பேசேன் என் ஈசனே!
ஈசானே

Sunday, December 25, 2011

ஏசுவே எந்தன் கர்த்தாவே



சொல்லிக்கொள்ளாமல்
ஞானஸ்தானம்
வாங்கினாள்
சகோதரி

முன்னம் சொல்லியிருந்தாள்....
ஆனால் அது
இன்றென பகரவில்லை

யேசுவே எந்தன் கர்த்தாவே
உனக்கு ஸோஸ்த்திரம்
நல்லவேளை நீங்கள்
எங்க சொந்தக்காராக இருக்கவில்லை
இல்லையெனில் எப்படி என் தங்கை
உன்னை நேசிப்பால்

கலியுக கர்ணன் கிருத்துவத்தையே ஏற்றிருப்பான்
துரியோதனை விடுத்து
சமய சங்(கி/கொ)லிகள் பாடாய் படுத்துகிறது

காசுகாக மாறுகிறார்கள்
என அச்சு பிச்சென
எல்லா இந்திய சாதியும் சொல்லுகிறது
ஆப்பிரிக்காவிலும் இப்படி சொல்லக்கூடும்...
என்ன செய்ய
ஏசுவே எந்தன் கர்த்தாவே என்னை ஆதரி

- இயேசு: என் கிருபை உனக்குப் போதும் – 2கொரி.12:9

Saturday, December 24, 2011

பிம்பங்களில் மறைந்துறங்கும் நாம்




முப்பத்தைந்து வருட தனிமை
தனிமை கொடுக்கும் வெறுமை
வெறுமை கொடுக்கும் பித்து
பித்துகொடுக்கும் சந்தோஷவெளி
வெளியுடைக்கும் சத்தக்காரர்கள்
பார்த்தவுடன் நகர்ந்துவிடல்
சாத்தயங்களை சாத்தியபடுத்த சாதுரியங்கள்
தொடரும் விளையாட்டுகள்
மர்மம் ஞானம் தந்திரம்
என பாயும் வாழ்க்கை
எல்லாம் கடந்து போ என எவன் உளறினாலும்
கடக்கும் நேரங்களில் கவனமாயிரு என எவன் உரைப்பான்

Monday, August 15, 2011

நீ




ஒரு புயல் போல
மின்னல் போல
கவனமற்ற நேரத்தில்
வந்தாய் நீ.

குறிக்கிறேன்,

கருங்காடு, சாம்பல்
பைக் குடைசாய்தல்
தென்னங்கீற்றில் சிக்கிய பட்டம்
பெஞ்சில் இரவு முழுவதும் ஆர்10
மறுநாள் மத்தியம் வரை ம.கா.நி
வால் பக்கம் தலைகொண்ட பாம்பு
கொத்தி கொள்கிறது பரஸ்பரம்

சாபம்
நீங்கிடாத சாபம்



ஒரிஜினல் இங்க
http://karuvelanizhal.blogspot.com/2011/08/blog-post.html

Thursday, May 5, 2011

பதிவர்களும் சில மேட்டர்களும்




இலக்கியவாதிகள்: comments are closed, இவர்கள் டீவியில் தலை காட்டுவார்கள்... அப்புறம் டீவியையே விமர்சிப்பார்கள். டீவியை பார்த்ததே இல்லையென சத்தியம் செய்வார்கள். உலகின் தலை சிறந்த கவிதையென்று ஒரு பெரிய சிறுகதையை கொடுத்து கான்சல் பண்ணுவார்கள். நான் அவர சொல்லல.. சும்மா பொதுவாதான் சொன்னேன். யாருக்கும் கமெண்ட் இட மாட்டார்கள்.

அடுத்த நிலை இலக்கியவாதிகள்: இவர்களின் comments box ஓப்பனில் இருக்கும் ஆனால் இவர்கள் தப்பி தவறி கூட மற்றவர்களுக்கு கமெண்ட் போட மாட்டாங்க... (அ சொல்லல)

பதிவர்களில் பிரபலம்: இவர்கள் ரொம்ப occasionalla மத்தவளுக்கு கமெண்டிடுவார்கள். அதுவும் - ஸ்மைலி ஆங் சூப்பர் - இத்தியாதிகள்.... 6 மாதத்திற்கு ஒரு முறை கமெண்டிடுவார்கள்.(நர்சிம்ம சொல்லல)

ரொம்ப பிரபல பதிவர்கள்: இவர்களும் யாருக்கும் கமெண்ட் போட மாட்டார்கள்.. தெருவில் நாம மரியாதைக்கு பேச முற்பட்டால் பெரிய லாடு லபக்கு தாஸ்ஸாட்டும் கிளம்பிவிடுவார்கள்... சில பிரபலங்கள் மதிச்சு பேசுவாங்கப்பா(அது அதிஷா தான்)

தைய்யா தக்கா பதிவர்கள்: இவர்கள் ஒரு குருப்பா அலைவார்கள்.. ஏமாந்த எவனாவது சாதரணமா எதாவது சொன்னாலும் ஊதிபெரிசு படுத்துவார்கள்... இவங்க குருப்பல பெரிய லெவல்ல கோல்மால் நடந்த பிறகு... I humbly request ன்னு பம்மாத்துவார்கள்.

புதிதாய் பிரபலமாகும் பதிவர்கள்: இவர்கள் ப்ளாக்ல கமெண்டு போட மாட்டார்கள்... ஆனால் சேட்டிங்கிள் வந்து பிச்சிட்டிங்க பிசஞ்ட்டீங்கனு பகருவார்கள்... கமெண்டு போட டைம்மில்ல என்பார்கள்.


ரவுடி பதிவர்கள்:
கடவுள் என்பன் யார்?. அவன் என்ன எங்க வூட்ல மாவாட்டினா, களை பறித்தானா என்று சவுண்டுவுடுவார்கள்.. அப்புறம் ஹோட்டல் வெச்சிட்டு செட்டில் ஆகிடுவாங்க... யார் அந்த வால் பதிவர்ன்னு கேக்ககூடாது.

மிகவும் பிஸியான பதிவர்கள்: எப்போதும் பிஸியா டீவிட்டர், பேஸ்புக், பஸ் என்று எப்போதும் பிஸியா இருப்பாங்க... அடிக்கடி போட்டோவ மாத்துவாங்க... கவித எழுதுவாங்க..(வாசு தண்டோரா என நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல.)

சுவையான பதிவர்கள்: ரொம்ப பிரமாதமா எழுதகூடியவங்க ஆனால் பாருங்க எழுதாமல் பண்ண வைச்சுடுது இயற்கை. அதுலயும் R.P.ராஜநாயஹமெல்லாம் தொடர்ந்து எழுதியிருந்தால் பெரிய இலக்கியவாதிங்க பிளாக்கே ஆட்டம் கண்டுபோயிருக்கும். இதுல லேடிஸ் காலேஜ் வாசல்ல போய் நிக்கற நேரத்தல ஒரு பதிவு எழுதலாம் இருந்தாலும் நேரமில்லைன்னு பதிவு எழுதறது இல்ல இந்த ஆஞ்சனேயா... சே சே அது அனுஜன்யா இல்லங்க. பட்டர்பிளை சூர்யாவின் உலக சினிமா காத்து வாங்குதுங்க. சுவையான பதிவர்கள் லிஸ்ட்ல என் பேர சேர்க்க சொல்லி நீங்கல்லாம் கத்தறது கதறது எல்லாம் எனக்கு கேக்குதுங்க. விடுங்க எனக்கு தற்புகழ்ச்சியெல்லாம் புடிக்காது.


சில கவிஞர்கள் பதிவு எழுதிட்டு கமெண்டு போடலன்னா உதைப்பேன்னு மிரட்டுவாங்க... அவங்க பேரா...? அட அவங்க என் நண்பருங்க.. அதனால உட்டுருவோம் அவங்க பேர.

போரடிச்சுடுச்சு...அட எனக்குதாங்க.. பிறகு வேறேதாவது தலைப்புல பாக்கலாம்.. பை.

Tuesday, March 1, 2011

வெட்கிச் சிரித்தாள்




விரல் பிடித்து
மலைமுகடுகளில்
மெதுவாக
சுற்ற வைத்து
கற்றுக்கொடுத்தாள்

நாலு வட்டத்திற்கு பின்
பொறுக்க இயலாமல்
மலைமேட்டினை
கடித்துவைத்தேன்

கடித்த வாயினை
சட்டென அறைந்துவைத்தாள்

வலிக்கும் உதடுகளால்
தடவி கொடுத்தேன்
கடித்த முகடுகளை

பிறகானது தலைப்பு

Friday, February 18, 2011

நெருக்கமான பின்பு படிக்க




இரவின் தூக்கத்தில்
விழித்திருக்கிறது நெடிய வானம்
பிரித்து பார்க்கையில்
வாழ்விலில்லை சுகந்தம்

வனமான வாழ்வு
சொல்லும் நிறைவுறாத தேடல்
தேடல் என்பதும்
நிறைவுறாத வானம்

வாழ்வே ஒரு கொடும் கனவு
புணர்தலும்
புரிதலும்
செறிவுறாத
சாலை நோக்கி நகரும்
தேகம்...

உயிரெடுப்பதும்
உடல் சுருங்குவதும்
கானக்கிடைக்காத தங்கம்
தகரமும் தங்கமும்
உயிர் உடைத்த
EQUIVALENT

புரிதலும்
சிதறுதலும்
ஒன்றே