Sunday, October 25, 2009

கண்டவை கேட்டவை


எல்லோரும் (நம்ம ப்ளாகர்ஸ்தாம்பா) எதிர்த்த, பாராட்டிய, உன்னைபோல் ஒருவன் படம் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. வேகமாய் ஓடி மறைந்தது. ஆங்கில(french,Italy, spanish etc) படங்களை மட்டுமே விரும்பி பார்க்கும் நமக்கு நல்ல தீனி போட்டது. சில overdoseசும் உண்டு. ’தீவிரவாதம்’ சரியாக புரிந்துகொள்ள படவில்லையோ என்று யோசிக்க வேண்டியிருக்குறது நம்மவர்களின் படங்களை பார்க்கும்போது.
உதாரணம்: The Traitor: அசத்தல் கதையமைப்பு, கதா பாத்திரத்திற்கு இணையாக ஓடும் நடிக்கும் காமிரா, நேர்த்தியான எடிட்டிங், உரையாடல் என்று பின்னி பெடலெடுப்பார்கள். இசை சிறப்பாயிருக்கும். உ.போ.ஒ-னிலும் இசை திருப்தி.

நான் மிகவும் இரசித்து படிக்கும் தளங்களில் மிக முக்கியமானவர் R.P.ராஜநாயஹம். ரத்தினசுருக்கம் இவரது எழுத்து. வியக்கவைக்கும் நியாபக சக்தி. அதன் இரகசியம் அறிய ஆசை.
விஷய ஞானம் உள்ளவர். பார்த்து அனுகுங்கள். படித்து மகிழுங்கள்.

கிசு கிசு
பிரபல பதிவர் அவர். சினிமா விமர்சனம் எழுதி பிரபலம் அடைந்தவர். பெயரில் “c" "r" எழுத்து உடையவர். யூத்து யூத்து என்று சொல்லிகொள்பவர் இப்போது உண்மையில் யூத்தாகி 18 வயது இளம்பெண்னுடன் K.K.Nagar, kodambakkam, saaligramam ரெஸ்டாரண்ட்களில் நெருக்கமாக ரவுண்டு கட்டுகிறார்.

இது என் முதல் பதிவு. கவிதை அல்லாதது.(என்ன கவிதை எழுதி கிழிச்சேன்னு கேக்கப்படாது)

இதுவரை பதிவு எழுதி ப்ளாகர்களாக இருக்கும் அனைவருக்கும் என் முதல் பதிவு சமர்ப்பணம்.






























Wednesday, October 7, 2009

பிறழ்ந்தவனின் மன ஓட்டம்

ஓடி விளையாடு! - முதலில்
வயிறு நிறைய சோறிடு
என்றது பாப்பா!

கண்ணே கலைமானே!
கண்ணு மைனஸ் ஒண்ணு
கலைமான் கிண்டி ஜூல...


தோற்றுவிடுவோமென்று
தெரிந்தே போரிட்டான்
இராவணன்
இறைவனை எதிர்த்து
தோற்றது மனிதனா? கடவுளா?

நித்தம் போராடி
வாழ்க்கை ஓட்டும்
அன்றாடகாய்ச்சிகளாய்
என்னைப்போல்
பலபேர் பாரெங்கும் (பாரிலும்)


சேரவே முடியாத
ஏற்ற இறக்கங்களை கொண்ட
திருமணங்கள்
போராடி பேயாடி
பின் மாயும்

துணிந்து அறுத்துக்கொண்டாலும்
பிள்ளைகளின் வாசனை
சதா வந்து போகும்

வேதனையோடு நகர்தலே
வாழ்க்கையெனில்
இது தேவைதானா இறைவா...
‘தேவையென்றும்
தேவையில்லையென்றும்
எனக்கு ஏதுமில்லையென்றான்’
போடா பா_ என்றேன்.

நாள்ளொன்றாய்
சாராய நெருப்பினில்
திளைத்து ஊறி
எரிந்து போகும் உடல்கள்
எரிக்கும் வேளை காத்திருக்கும்
வரை கொண்டாட்டமே...

வியாதியில் வலியில்
துடிக்கும் போது குவாட்டரோடு
வந்து தோள் தூக்குபவரே
நண்பர்.. மற்றோர் துன்பர்

Scene 42 short no:142 Take 1

வலியில் கறைந்து செல்லும் மனது
உள்ளோடி உறையும் புகையின் படிமம்

Scene 42 short no:143 Take 2

உள்ளே புகையை போல படரும் வலிகள்
சாவை நோக்கி காத்திருக்கும் நான்

Cut
Take ok

Tuesday, October 6, 2009

நிதர்ஸனம்

காதல்
பாசம்
பரிவு
கருனை
விட்டுகொடுத்தல்
கல்யாணம்
தாய்
தகப்பன்
புள்ள
அண்ணன்
அக்கா
தங்கச்சி
தம்பி
மன உளச்சல்
கோபம்
எல்லாம் டூப்பேஏஏஏஏஏஏஏஏஏஏ
சுயநலந்தான்
டாப்பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ