Tuesday, December 14, 2010

சாரு - சரசம், சல்லாபம், சாமியார்

புத்தகவெளியீட்டில் அவரை பார்ப்பேன் என கிஞ்சித்தும் நினைக்கவில்லை. 90களில் அவரை ஒரு முறையாவது பார்ப்போமா என்று மனம் நாயாக அலைந்திருக்கிறது. நேரில் பார்த்தபோது(அதாவது ஒரு நாலைந்து rowக்கு பின்னே இருந்து பார்த்தேன்) பிறகு அவரை அருகாமையில் பார்த்தது நான்கைந்து வார்த்தைகளும் சில சொற்ப வினாடிகளும் - வாழ்வில் அற்புதமான கணங்கள். அவரும் ஆட்டோகிராப் போட்டுவிட்டு ஏதும் பேசாமல் ஒரு பார்வையோடு என் கை பிடித்து படியிறங்கி சென்றுவிட்டார். அவர் குஷ்பு என நீங்கள் நினைத்தால் அது தவறு. அவர் யார் என பின்னர் சொல்கிறேன்.

சாரு புத்தகத்தை யாரும் வாங்கவேண்டாம் எச்சரிக்கை.. அப்படி தறுதலையாக ஸாரி தவறுதலாக வாங்கியிருந்தால்.. தயவுசெய்து பிரித்து படிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்... அப்புறம் அந்த போதையை நிறுத்துதல் என்பது இயலாத விடயம். ’சரசம்-சல்லாபம்-சாமியார்’ என்ற புத்தகத்தை வாங்கிய கையோடு வீட்டுக்கு வந்து 2 தோசையை கிள்ளி போட்டுக்கொண்டு புத்தகத்தை படிக்க ஆரம்பிக்க(இரவு 11.30) அது விடியல் வரை துரத்திக்கொண்டே சென்றது.

இவர் சொல்லி நித்தியானந்தவை என்.எஸ்.பி நிகழ்ச்சியிக்கு பார்க்க போன பரிதாபமான ஜீவராசிகளில் நானும் ஒருவன். சென்றுவந்த மறுமாதமே அவர் தொலைக்காட்சிகளில் ரஞ்சிதாவுடன் காட்சி தந்து லோகத்தில் உள்ள குஞ்சுசுலுவானிகளிலிருந்து பெருசுகள் வரை அதிர்ச்சி தந்தது ஊரறிந்தது. ஆனாலும் நித்ய தியானம் நன்றாகவே இருந்தது. சக நண்பர்கள் நேரிலே வந்து கடைவைத்து கலாய்த்து போனார்கள். அப்போது எனக்கும் சாருவின் மீது எழுந்த கேள்விகளுக்கும் கோபங்களுக்கும் மிக அழகாக தெளிவாக அவருக்கே உரிய, ரோலர் கோஸ்டர் நடையில் ஒரு தொடராக fragments fragments ஆக, லாவகமாக நகர்த்தி சொல்கிறார். நாமும் அடுத்த சீன் என்ன என்று ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

புத்தகத்தில் நீங்கள் எதிர்பாரா விடயங்களையும் நிறைய தெளித்து போகிறார் போகிறபோக்கில். புத்தர், இஸ்லாம், கிறித்துவம், அகோரி, இமயமலை, சந்திரசேகர ரெட்டி, அபி எம்.பி. (அபிக்கு கொடுக்கற definition :)) மற்றும் ஷிரடி பாபா,பாபாஜி, யோகனந்தா என்று வந்து போகும் கதா பாத்திரங்களும் காத்தரமான விஷயங்களும் நிறைய. புத்தக வெளியீட்டில் கவிஞர் ரவிக்குமார் எம்.எல்.ஏ சொன்னது போல வார பத்திரிக்கைக்கு மட்டும் எழுதாமல் அதன் குறுக்கு வெட்டு தன்மைக்கு ஏற்றால் போல வாகர்களுக்கு என்ன சேரவேண்டுமோ அதை துனிந்து கொடுத்திருக்கும் சாருவுக்கு ஒரு சபாஷ்.

நான் என் வாழ்க்கையில் முதன் முறையாக ஆட்டோகிராப் வாங்கிய அந்த நபர் எழுத்துசித்தர் பாலகுமாரன் தான். சாரு பிஸியாகவே இருந்ததால் [பெண்களுடன் பேசிபடியே(அழகிய)] அவருடைய கையெழுத்து வாங்கமுடியவில்லை. உண்மையில் சாருவின் அங்கதம் மற்றும் புதுவகையான எழுத்தில் மயங்கியே பாலகுமாரனிலிருந்து(Osho, JK சேர்த்துக்கொள்ளவும்) சாருவை வந்தடைந்தேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஒன்று தெரிகிறது திரும்ப பாலகுமாரனுக்கே தாவிடலாமா அல்லது அமைதியாக இருந்துவிடலாமாவென? விழித்தெழுந்த மனிதர்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் பேசுகிறார்கள். இருந்தாலும் சாருவின் பன்முகத்தண்மை வியக்கவைக்கிறது.

கடைசிவரை குஷ்பு வராதது பெரிய ஆறுதலும் கூட. சாரு புத்தகங்களை உயிர்மை பதிப்பகம் 13.12.2010 அன்று காமராஜ் அரங்கத்தில் வெளியிட்டதை பற்றிய பிரபல பதிவர்களின் பதிவுகள்
http://pitchaipathiram.blogspot.com/2010/12/blog-post_16.html
http://www.jackiesekar.com/2010/12/13122010.html
http://www.narsim.in/2010/12/blog-post_15.html


இணையத்தில் வாங்க www.uyirmmai.com
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை – 6000018
91-44-24993448
uyirmmai@gmail.com

Monday, October 4, 2010

மனித நிறங்கள்





எதிர் கவுஜை

எல்லோராலும் முடிவதில்லை
தினம் ஒரு குவாட்டர் அடிக்க
சுதந்திரமாய் ஒரு தம் அடிக்க
பிகர்களை சைட் அடிக்க
நல்ல காற்றை சுவாசிக்க
டிராபிக் இல்லாமல் வண்டியோட்ட
பொண்டாட்டி கிட்ட எதிர்த்துபேச

உண்மையாய் இருக்கிறேன்
பேக்காய் இருக்கிறேனாம்

ரெட்டை சிகப்பென்றும்
ப்ளுவை நீலமென்றும்
தலையாட்டமுடியவில்லை
(ஏன்னா ஸ்பான்டிலேட்டிஸ்)

மாற்ற நினைத்தாலும்
மாறாத சில லூசுகளைக்போல
மாறாத லூசு நான்

பீர்
பீர்தான்

நானும் அப்படியே
ஹாட்ல இருந்து
கூலுக்கு மாறிட்டேன்


ஒரிஜினல் இங்க கிளிக் செய்து படிக்கவும்.

Saturday, October 2, 2010

எந்திரன் - ஒரு சிறிய பார்வை



ஒரே கதையை வைத்து பல படங்கள் பண்ணிய ஷங்கர் இதில் I-Robot-ன் இன்ஸ்பேரேஷனில், இவர் ஸ்டைலில் படம் செய்து இருக்கிறார்.
Second half-ல் கலாபவன்மணியின் கண்களில் மண்ணைதூவிட்டு ஓடிவந்து மூச்சிறைக்கிறார்கள் கதையின் நாயகனும் நாயகியும்... அங்கே தான் படமும் மூச்சிரைக்க ஆரம்பிக்கறது. அங்கே தொடங்கியது வில்லன் ரஜினி ‘ரோபோ’ என்னும் வரையில் நம்மை வறுத்துதெடுக்கிறார்கள். முதல்பாதியில் உள்ள வேகம் இரண்டாவது பாதியில் இல்லை. ஷங்கரின் அடுத்த படம் மிகவும் போர் அடிக்கும்... இது எனது சொந்த கணிப்பு.
பாப்கார்ன் 70ரூ அது தியேட்டர் முழுக்க சிதறிகிடக்கிறது... 70 ரூபாய் என்பது ஒரு அடிதட்டு மக்களின் ஒரு நாளைய குடும்ப சாப்பாட்டு செலவு. படத்துக்கு நான் செய்த செலவு 1350... மூன்று பேருக்கு. இதுவும் அ.த.மக்களின் பாதிமாதச்செலவு. (ஷங்கர்தான் கருத்து சொல்லனுமா நாங்க சொல்லமாட்டோமா?)
Interval விட்டவுடன் என் பையன் ‘அப்டியே சுடனும்போல இருக்கு’ என்றான்... ஏன் என கேட்க ... Interval விட்டவங்களையான்.. அந்த அளவுக்கு interesting, informative, dialogues, speed.. in first half. தமிழுக்கு எல்லாம் புதுசு. ஒரு டிக்கெட் விலை 300.. அது first halfகே கொடுக்கலாம்... அப்புறம் அம்புடுதேன்...

இந்த படதிற்கு மீடியா கொடுத்த ஹைப் இருக்கே சொல்லிமாளல.. முக்கியமா NDTVHINDU, Sun Network, NDTV Profitல கூட ... என்ன கொடுமை சரவணா இது...

தலைவர பஞ்ச டயலாக் பேசவுட்டு... பல ஸ்டையல்கள காட்டியிருந்தா பின்னால் வரும் தோய்வை சரிகட்டியிருக்கலாம்... கமலா தியேட்டர் screen 2ல காத பஞ்சர் ஆக்கிட்டாங்க...


காலைல 5.30 மணிக்கு இரண்டு தியேட்டரில் டிக்கெட் இருந்தும் நான் தூங்கியது கண்டு என்னை நானே மெச்சிக்கொண்டேன்... கடைசியில் ஈவினிங் ஷோக்கு என்னிடம் வேலை பார்க்கும் தம்பி டிக்கெட்டை கையில் வந்து கொடுத்தான்... அடித்தது எந்திரனுக்கு யோகம்.

ஓம் சாந்தி ஓமில் வருவது போல கடைசியில் பங்குபெற்றவர்களை visual treatடாக கொடுத்துயிருக்கலாம்... மணிரத்தினம் படம்போல பெயர்களை போட்டு போரடித்தார்கள்.

தலைவருக்கு கழுத்திலிருந்து உடை அணிவித்துயிருக்கிறார்கள். காரணம் படம் பார்ப்பவர்களுக்கு புரியும். ’ஜஸ்’ லாலாக்கு டோல் டப்பிமா போலியிருக்கிறார்... இரண்டு வயதானவர்களை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் எவ்வளவு கஷ்டப்பட்டியிருப்பார் என்பது புரிகிறது.

சாபுசிரிலை International criminalகளின் transilator ஆக்கியிருக்கிறார்கள்... இரண்டு சீணுக்கு வந்து போனாலும் பாந்தம். கலாபவன்மணி வீணடிக்கப்பட்டுள்ளார். லிஸ்ட்டில்.. கருணாஸ் சந்தாணம் சேர்த்துக்கொள்ளலாம். படம் முழுக்க திகட்ட திகட்ட ரஜினி.

Second half bore, first half nonsense to the core.. superb..
வழக்கம்போல குடும்பத்தோட ரசிக்கலாம்.

Tuesday, September 14, 2010

மாப்பிள்ளை ஜோரில் பங்குசந்தை




தீபாவளிக்கு இன்னும் ரெண்டு மாதம் இருக்கையில் இப்போதே தலதீபாவளி கொண்டாடும் புதுமாப்பிள்ளையாக பந்தா காட்டுகிறது நம் பங்குசந்தைகள். மே மாதம் பங்குசந்தை வீழ்ச்சி கண்டதும்; அவ்வளவுதான் இனி மீள எத்தனை மாதம் ஆகுமோ என்று வருந்தியவர்களுக்கு ஒரே பாடலில் பணக்காராணாகும் நம்மூர் ஹீரோ போல பங்குசந்தை ஒரு சில மாதங்களிலேயே ஏகத்துக்கும் வளர்ச்சியையும், வலிமையையும் பெற்றிருக்கிறது. சந்தையின் இந்த அபார வளர்ச்சி உள்நாட்டு வர்த்தகர்கள் லாபம் அடைந்தார்களா என்றால், ’இல்லை’ என்றே பதில் வரும்.

முதலீட்டாளர்களுக்கு சந்தை விழுந்தாலும் சரி, வளர்ந்தாலும் சரி முதலில் பலன் வந்து சேரும். ஆனால் வர்தகர்களோ சந்தை போக்கு எப்படியிருப்பினும் ஏற்ற-இறக்க அசைவின் அடிப்படையில் பலனை அனுபவிப்பார்கள். சந்தை மேலே சென்றாலும் தின வர்த்தகர்களுக்கு ஏற்ற சூழல் அமையவில்லை. இதில் பெரிதும் லாபம் அடைந்தது FII’s எனப்படும் பண்ணாட்டு அமைப்புசார் முதலீட்டாளர்களே.

அதிபுத்திசாலிகளே நோட் பண்ணுங்க

1. பொதுவாக ஒரு மாதத்துக்கு ஒரு முறையாவது பங்குசந்தை மேலிருந்து கீழ் சென்று திருத்தம் (correction) காணும் ஆனால் நான்கு மாதமாகியும் திருத்ததிற்கான சான்றுகூட இல்லை.

2. சந்தை மேலேறும்போது வியாபார தடங்களான calloption சரி put option சரி ஒரே அளவில் வர்த்தகம் ஆகாது இந்த முறை OPTION வியாபாரத்தில் இரு வாய்ப்பிலும் ஒரே அளவில் பணமும், பங்கும் வர்த்தகமாகிறது.

3. பங்குகள் பலவும் தங்கள் தடைநிலை அருகிலும் தாண்டியும் வர்த்தகமாகின்றன.

4. உள்நாட்டு பொருளாதார அடிப்படைகளைவிட அயல்நாட்டு பொருளாதார சூழலை தாங்கியே நம் பங்குசந்தை வளர்கிறது.

இது சந்தோஷமா? இல்லை சங்கடமா?

நம் பங்குசந்தைகளின் இந்த வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சிக்குறியதாய் இருந்தாலும் சந்தையில் தொடர்புள்ளவர்கள் இதை கொண்டாடலாமா அல்லது அமைதி காக்கலாமா? என்று குழப்புகிறார்கள். முன்பு சந்தை 5400 தொட்டதுக்கே சூப்பர் ஸ்டார் பட ரிலீஸ்போல் ஆட்டம் போட்டவர்கள் இப்போது 5800 என்ற இமயத்தை கடந்தும் ஆர்பாட்டமின்றி அடக்கி வாசிக்கிறார்கள். இதற்கு 2008-ஐ போல் நன்றாய் பறந்து புன்னாக்கும் தீபாவளி ராக்கெட்டாய் சந்தை ஆகுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இந்த குழப்பம். இறங்குதோ இல்லையோ கொண்டாட கிடைக்கும் இத்தருணத்தை நழுவ விடாமல் கொண்டாடுவதே புத்திசாலித்தனம்.

எப்போது திருத்தம் (correction)

என்னதான் பாஸிடிவா பேசினாலும் நெகடீவா சந்தைய அனுகியவர்கள் இப்போது அவஸ்தை படுகிறார்கள். அவர்களுக்கு நாம் எப்படி ஆறுதல் கூறுவது :P

மாமியார் (அயல்நாட்டு முதலீடு) உபசரிப்பில் மாப்பிள்ளை (சந்தை) பந்தா காட்டினாலும் எத்தனை நாள் தான் உபசரிப்பார் அந்த மாமியார் கல்யாண பந்தியில் நேரம் நீண்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் பந்தி முடிக்கப்பட வேண்டும். அதுபோல சந்தையில் இந்த சக்கைபோடும் விரைவில் அடங்கும். சந்தையில் செய்தியின்மை, ஆவல், அயல்நாட்டு முதலீடு, அதிக பணப்புழக்கம் போன்றவையாகச் சந்தை ஏறியது விரைவில் இந்த சூழல் எதிர்வினையில் அமையப்போவதால் சந்தை நன்றாக கீழிறங்கும். தாங்கு நிலைப்பற்றிய முரண்பாடு நிலவினாலும் தேசிய பங்கு சந்தை குறுகிய காலத்தில் 5200-ஐ தாங்கு நிலையாகவும் 5950 தடைநிலையாகவும் கொண்டு வர்த்தகமாகும்.

கட்டுரை உதவி: சிவசங்கர்

Sunday, September 12, 2010

பதிவுலகம் - இப்படிக்கு நான்




சித்தப்ஸ் பா.ரா அழைத்த தொடர் பதிவு இது. ஒன்னரை மாதத்தில் இப்பொழுது கிடைத்த 10 நிமிடத்தில் நெய்த பதிவு.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

D.R.Ashok

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அஷோக் தாங்க

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

வேறென்ன... பெரிய தமிழ் வார பத்திரிக்கைகள் போரடிக்க ஆரம்பித்ததால், சுஜாதாவும் இல்லை, அப்புறம் சாரு எஸ்.ரா போரடிக்க ஆரம்பித்தனால்.. வலையுலகில் நல்ல கவிஞர்கள் இல்லாததால்... தேவலோகத்தில் போட்ட மீட்டீங்கில் முடிவெடுத்து.. எல்லோரும் சிவபெருமானிடம் முறையிட.. சிவனும் ஆனந்த தாண்டவம் ஆடி.. இனி மண்ணுலகத்தில் D.R.அஷோக் கவிதைகள் எழுதி ’கொட்டாவி விடும் வலையுலகை’ குத்தாட்டம் ஆட செய்வார் என ரட்சிக்க நானும் கோதாவில் குதிக்க...

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

மவுண்ட்ரொடில் கட்டவுட் வைத்தேன், Times of Indiaல விளம்பரம் கொடுத்தேன்....உண்மைய சொல்லனும்னா.. ஒன்னும் செய்யல..

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் மனதின் உள் ஓசைகளையும்... கேட்டறிந்த ஓசைகளையும்.... ஒத்திசைவாகத்தான்.. என்னிசையை கோர்கிறேன்..

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டும் அல்ல......வாழ்க்கை தந்த நெடிய கசப்புகளில் மூழ்கிபோகாமலிருக்க

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

ஒன்னே ஒன்னு...

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம்- ஏற்பட்டது உண்டு. கோபம்தானே, இப்போ போயிடுச்சு!

பொறாமை – அப்படின்னா..?

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

’சக்கரை’ சுரேஷ், இளைஞர், இப்பொழுது எழுதுவதில்லை. கேட்டால் போரடித்துவிட்டது என்று கூறினாராம்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

என்னை பற்றி:
ஓவியன், நீண்ட பயணங்கள் தேசிய நெடுஞ்சாலையில், ட்ரெடிங் கம்பெனியில் ஹெட்ஜிங் அனலிஸ்டாக(Hedging Analyst) இருக்கிறேன்.


அழைக்க விரும்புவர்கள்:

1. யாத்ரா
2. மண்குதிரை
3. தேணம்மை
4. ஹேமா
5. பத்மா
இந்த லிஸ்டல ஏற்கனவே எழுதியிருந்த உட்ருங்க.. லிஸ்ட்ல விடுபட்ட நண்பர்கள் எல்லாம் எழுதுங்க... நேரம் கிடைக்க சொல்லோ..

Wednesday, July 14, 2010

உதை




அன்பே எப்படி இருக்கிறாயடி.. பணிக்கு கிளம்பவில்லையா...

கிளம்பிட்டேயிருக்கேன் அதான் பேச வரலை..அப்பாக்கு எப்டியிருக்கு?

மிகவும் நன்றாக உள்ளாரடி... இன்னும் சில காலம் இருப்பார் என்பது மகிழ்ச்சியே மனதுக்கு...

செம்மொழி மாநாடு வந்த அப்புறம் ஒரு மாதிரிதான் இருக்கீங்க

நீ கூறிய இரு பாடல்களின் வரிகளே காரணம்

ஒ.. ஒ.. ஆளபாரு

அப்பறம் உனை பிரிந்துருகும் பசலையும் ஒரு காரணி

உதைவிழும் ஒழுங்கா வேலையை பாருங்க.. எப்பவும் lol

நீ ’உதை’ என்பதும் சந்துருஷ்டியே தருகிறது.. காதல் ஒரு மாயப்பேயே

காதல் கத்திரிக்கா..!

இல்ல தக்காளி..

எதுக்கு சாம்பார் பண்ணவா..?

இல்ல கடிச்சு சாப்பிடத்தான்.. பெங்களூர் தக்காளியடி உன் கண்ணம்.. உயிரே உயிரே...

பாட்டு நல்லாயிருக்கா...?

நீ எந்த பாடலை குறிப்பிட்டாலும் அது நல்லாதான்யிருக்கும்.. ஏன்னா இதுல நம்ம டேஸ்ட் ஒத்து போகுது...(வேற ஒரு விஷயத்தில் மட்டும்)

ம்ம்... ஆனா என்னை திட்டினிங்க...

பொண்டாட்டிய புருஷன் திட்டாமா வேற எந்த நாய் திட்டும்

உங்கள திருத்த முடியாது... சாப்பிட்டிங்களா?

மொத மொத உன்னை சந்திக்கும் போது நல்ல காதல் பாட்டுதான் ஓடிச்சு.. அப்போ சத்தியமா நான் நினைக்கல.. எனக்கு பிடிச்சமானவள சந்திக்கறன்னு

ஐய்யோ ஐய்யோ தாங்கல

ஏன் திருந்தனும்.. உன்னை நினைச்சு இருக்கறதே சந்தோஷம்தான்.. சாப்பிட்டேன்.... நீ

இல்ல office போயிட்டு அப்புறம்

ஒ... I love u di

அப்படியே எப்பவும் அன்பா இருந்தா சந்தோஷம்

Thank you darling… ஏன் சில சமயம் நான் அன்பா இல்லையா?

ஆன்லைன்ல் இருக்கும்போது பேசமாட்றீங்க...

ஆபிஸ்ல ஜிமெயில் ஒபன் பண்ணிவெச்சிட்டு வேலையே பார்க்கவேண்டியதுதான்... நிறைய பொறுப்புகள் இரு வேலை பல நிலை... பேயிங் வெல் so working hard

ம்ம்ம் அப்படின்னா சரிதான்.. வேலைதான் முக்கியம்

கவித மனசே காணாமல் போயிடுச்சு... அப்ப அப்ப உன் ஞாபகம்தான் அத மீட்டெடுக்குது

ஒழுங்கா சாப்பிடுங்க சந்தோஷமா இருங்க...

சரி நான் போறேன்(போயிட்டு வர்றேன்)

ஓகே டார்லிங் டேக் கேர்..

பதிவு போடுங்க... நினைக்கறதே எழுதுங்க..

அதுக்கு நீ முத்தம் கொடுக்கனும்

(அதுக்கு அவள் சொன்ன பதில்தான் தலைப்பூ)

Monday, June 21, 2010

நன்றி





பதிவுலகத்திலிருந்து மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கும் போது ஒரு அங்கிகாரம். ஒரு தட்டி கொடுத்தல். பெரிய ஆளுமைகளின் நடுவே என் பெயரும் அதுவும் சிறந்த நடுவர்களின் தீர்ப்பு. கொஞ்சம் ஆடித்தான் போனேன்.. ’உறுபசி’ ஒரு சில வினாடிகளில் வந்து போனதுதான்.. அதன் கடைசி நாலு வரிகள் மட்டும் நின்று யோசித்தது. கவிதை என்பது உணர்வுகளின் கொதிநிலை என்று பெருந்தேவி சொல்வார். எனக்கு ’அந்த நேரத்து கொதிநிலை’ அவ்வளவே.

மகிழ்ச்சியாக உள்ளது. ஜ்யோவ்(சிவ)ராம் சுந்தர் - இருவருக்கும் எனது நன்றி மட்டும் அன்புகள். போனில் முதலில் பாராட்டிய மும்பை புகழ் பிரபல கவிஞர் பாட்ஷா அனுஜன்யா(அப்புறம்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது),கவிஞர் யாத்ரா, கவிஞர் முத்துவேல், சித்தப்ஸ், ஹேமா, பத்மா, ரிஷான் ஷெரிப், கமலேஷ், உழவன், ஜெனோவா மற்றும் பலர்.. மடலிலும் தொலைபேசியிலும் வாழ்த்தும் நண்பர்களுக்கும்.. தோழிகளுக்கும் வாழ்த்தபோவோர்களுக்கும் நன்றி...

எனது அங்கிகாரத்தை... கவிதை போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து கவிஞர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்... மிகுந்த அன்புடன் உங்கள் D.R.அஷோக்

Sunday, June 6, 2010

சின்ன சின்ன வார்த்தைகள்




அவரை தெரியுமென்றான்
இவரை தெரியுமென்றான்
உன்னை உனக்கு தெரியுமா?
என கேட்க நினைத்து மௌனமாய்
பார்த்துக்கொண்டிருந்தேன் என்னை!


சில சமயங்களில் அவள் கன்னங்களை
தாண்டி சிந்திக்க இயலவில்லை
பல சமயங்களில் அவள் கரங்களை
விடுத்து தெளிவேதுமில்லை


தவறவிட்ட விஷயங்கள்
கனவில் துறத்தும்
வார்த்தைகளை கழட்டிபோட
நெஞ்சுபாரம் குறையும்


கடந்துக்கொண்டிருக்கும்போதே
கடந்துவிட்ட உணர்வு
கடக்கையில் நானற்ற உணர்வு


நிறைய படித்து தள்ளுகிறேன்
கவலையே இல்லை
ஏனெனில்?
எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி

Saturday, May 15, 2010

அகவலோசை கவிதைகள்




ஞானம்
யோசித்து பார்க்கையில்
எளிதில் கைகூடுவதாகவும்
எளிதில் கைகூடாததாகவும்
ஒரே நேரத்தில் தோன்றுவது



ஏன் இப்படி வீணாய்
சுற்றி வருகிறது
கடிகாரத்தில் முள்




மனதில் எழுதி பாதுகாக்காமல்
விட்ட கவிதையொன்று
அழுதுக்கொண்டே
பின் தொடர்ந்தது
குழந்தையைபோல



பள்ளியும் கல்லூரியும்
கற்றுக்கொடுத்தது
கற்றுக்கொள்ளல் வகுப்பறைகளில்
இல்லையென்பதை!



வாழ்வின் அரசியலை
எளிதாய் கடக்க
உதவுகிறது
ஞானம்

Thursday, April 29, 2010

என் இனிய பொன் நிலாவே



நீ பேசி முடித்தபின்னும்
நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன் உன்னிடம்
இரவுகளின் வெளிச்சத்தில் மூழ்கி புரண்டு கொண்டிருந்தேன்
அடித்த மூன்று லார்ஜ்களும் பேச தொடங்கும்
முன்பே காணாமல் போயிருந்தன
எப்போது தூங்கினேனென்று தெரியவில்லை
கனவு வராத ஆழ்ந்த தூக்கம் - சொற்பமான பொழுதில்
சட்டென விடிந்தது - ஒருவேளை கருவானம்
வீழ்கையில் தூங்க ஆரம்பித்தேனோ..?

இனி வேலை வேலை என அலுவல்கள்
உன் நினைவுகளை விழுங்கி செல்லும்
மறுபடியும் இரவு வருகையில் உன் நினைவு வரும்
நீங்காத இதம்தரும் பொழுதுகள்

இயங்க வைப்பதும் இயக்கிவைப்பதும் காதல்தான்
புதிதாய் மனம் மலர
புத்துணர்வாய் உடல் மலர
காதல்
அல்லது
தவம்
தேவைதானோ என் அன்பே?

எல்லாம் கொடுத்த உனக்கான
பூச்செண்டு!

Sunday, April 25, 2010

இதய கூட்டுக்குள்ளிருந்து கலைத்து போட்ட வார்த்தைகள்




இதய கூட்டுக்குள்ளிருந்து கலைத்து போட்ட வார்த்தைகள்
இயந்திரத்தனமாய் வாழ்க்கை மாறுகையில்
கவிதை மறைகிறது வேறுமனம் வெறுமையாய்
சில்லரைகளின் முன் அய்யராவது ஆச்சாரியாவது
அபஸ்வரங்கள் மட்டுமல்ல கவிமனமும் காணாமல்தான் போகிறது
அதை உடைத்து வந்து உட்கார்ந்தாலும் வாழவின்
ஆதாரதேவைகள் அடித்து ஓடவைக்கிறது
இறைவா! அடுத்த ஜென்மத்திலாவது ஆரம்பத்திலேயே
எல்லாவற்றையும் கொடுத்துவிடு
சொகுசாய் உட்கார்ந்துக்கொண்டு
ஏழைகளை பற்றியும் ஏகாதிபத்தியத்தையும்
Atleast மாடியில் வடாம் போட்டதையும்
சியல்லோ காரை விற்றுவிட்டதையும்
பற்றியாவது எழுதி தொலைக்கிறேன்


காதலியும் மனைவியும்
பொய் சொன்னேன் நம்பினாள்
ஒருநாள் உண்மையை சொன்னேன்..
’ஏய்! நீ பொய் சொல்ற’ என்றாள் காதலி

செத்து தொலைக்கிறேன் என்றேன்
’மொதல்ல இன்சுரன்ஸ் போடு’ என்றாள் மனைவி

காதலியையும் மனைவியையும் சமாளிக்க
இருவரையும் அன்பே என்றே அழையுங்கள்
அப்போதுதான் பெயர்மாற்றி
உளறி மாட்டிக்கொள்ளமாட்டீர்.


ரிலாக்ஸ் ப்ளிஸ்
இராகவேந்திரர் ஷிரிடி ரமணர்
இப்ப ஜக்கி - யாரை வேண்டினால்?
துரத்தி வரும் இந்த தெரு நாயிடமிருந்து தப்பிப்பது!

தெளிவு என்பது
குழப்பங்களின் முடிவா?
குழப்பங்களின் தொடக்கமா?

Thursday, March 11, 2010

ஹிருதயம் கிழிய இதுவரை ஏற்றி வைத்த கசடுகளோடு ஒரு கலா பயணம்



உனக்கு தெரிந்தது தமிழ் வார்த்தைகள்
எனக்கு தெரிந்தது உள் வார்த்தைகள்..
அதற்கு மொழி கிடையாது
மொழியற்ற மொழி அது
மொழி பெயர்த்தால் தோற்க்கும் மொழி
சிறந்த மொழி உன்னது என்று முன்மொழியாதே
மொழிகள் தோற்க்கும் பல விடயங்களில்
மொழிகளுற்று வாழ பழகிடு

உள்ளுக்குள் வெடித்து விழுந்த வானம்
பிரபஞ்ச முடிவு தேடி பறக்கும் அவன்
விடைதெரியா இறைதேடல்
சுழற்றி வீசும் வார்த்தைகளில் மனமாட
உடை இடை வளைந்து குழைந்தாட

எண்ணத் தொடக்கத்தில் மறைந்து வாழும் இறை
எண்ணச் சிதறல்கள் பெறுக்கி எடுக்கும் நானை

வீரியமிழக்குது ஒரே இடத்தில் உட்கார்ந்த உடல்
ஞானம் பிறக்குது சிலருக்கு பைல்ஸ் வருகுது
உயிர்கொடுக்குது ஒரே இடத்தில் உட்கார்ந்த கோழி
வாழ்க்கை விந்தை கொடுத்து சிந்தை வளர்க்கிறது
பூமி பந்தை உதைத்து சூரியனிலிருந்து தள்ளியிருப்போம்
Itz செம்ம hot machi

விளங்காத வாழ்க்கை
மனமென்னும் புதிர்
ஒருநிலையில் வாழாத எண்ணம்
இருட்டில் கண்திறக்கும் பெருங்காமம்
கொட்டும் சர்பமென மாட்டும் வாழ்வு
பொழுதுபுலரும்படியே மாறும் மனம்

மனம் - துரத்தும் நாய்
நாயாய் துரத்தும் - மனம்
கனம் தோறும் - வேடிக்கை
குறையும் - மனம்
வனம் தேவையற்று

பெண் துறத்தும் மனம்
வாசனை சலிக்கா இரவுகள்

வியர்வையில் குளிக்கும் பின்னிரவுகள்
விடியல் தியானத்தில் முதுகில் இறங்கும் கோடுகள்
இரண்டும் ஒன்றா?

ஆகுநீர் அணைநீர்
செவுட்டில் அடிக்கும் இனி உன் கிண்டல்கள்

Thursday, February 25, 2010

பட்டுன்னு ஒரு கவிதை





’எனக்கு சாமுத்ரிகா பட்டு’
என்று ஆரம்பிக்கும் தொலைக்காட்சி
விளம்பரம் பார்க்கமுடிந்தது
அழகியல் கொண்டாட்டமே

எம் ஊரின் பெண்கள் கச்சை கிழிசல்களை
சீலையில் நாசுக்காய் மறைப்பதும்
சேலையின் ஓட்டைகளில் குழந்தைகளுக்கு
மலர்ச்சியா நிலா காட்டுவதும் இயல்பே

’காஞ்சிவரம்’ படத்தில் ஒரு தந்தையின்
வாக்குறுதி குறுக்கே வந்துபோனது
’உன் கல்யாணத்துக்கு பட்டு சீர் செய்வேன்’
அப்பெண் பெற்றதோ வாய்க்கரிசி


பால்யத்தில் தறி சத்தம் கேட்டு நடந்திருக்கிறேன்
திடீரென காணாமல் போயின ஓர்நாள்
எங்கு தேடுவேன் அந்த அம்சத்வனி ராகத்தை


ஊரை....ஊரென்று சொல்லுவதில்லை
வேறொன்றே....சொல்கின்றனர்!
உறக்கச் சொல்லுடா மானிடவா
மண்ணில் கீழோர் மேலோர் இல்லை!

So மண்ணில் கீழோர் மேலோர் இல்லை
ஒன்றிருந்தால் ஒன்று.. இல்லை

Thursday, February 18, 2010

திருத்தொண்டர் புராணம்





முன்னரவில் தோழியோடு காதலை சொல்லி உருகி

இரவு சுகிர வேறுஒருவளோடு இணைந்துகிடந்து

விடியல் முதல் இறைவனோடு இரவு வரை

முதுகுதண்டு அதுர பூரணத்துவம் பெற்று

காலை நித்தியதியானம் செய்து தெம்பாய் உணர்ந்து
சில மணிநேரத்தில் பெண்களின் பிட்டம் பார்த்து நடந்து

நண்பனுக்கு அட்வைஸ் தந்து அவன் ஞானியென சொல்ல

முழுக்க வியாபாரத்தை பார்த்துக்கொண்டும்

குழந்தையோடு ஐஸ்கீரிம்முக்கு நேரம் ஒதுக்கி

ஒரு ரூபாய் பூமரை தாய் தின்றதால் கதறிகொண்டு
வந்த குழந்தையை வெறிக்கொண்டு சாத்தி

இங்கதான் கவிதையும் பிறந்தது

அவளை அசிங்கமாக திட்டி வந்தபின்னர்
அடித்த அடி வலித்தென்று போனில் சொல்லி
பிள்ளையை பார் என எனக்கான போத்தலை வாங்கியபடி

எனக்கான துணை சரியில்லை வசதியில்லை படிப்பில்லை
படிப்பும் பணமும் இருந்தால் எனை மதிப்பாளா
என சமாதானம் செய்துகொண்டு

இப்ப மட்டும் என்ன வாழுது என்று நினைத்துக்கொண்டே
முதல் ரவுண்டு முடித்தவுடன்
மெய்ஞானம் பெற்று
எல்லாவற்றிலும் இருந்து வெளியேவந்தேன்

Wednesday, February 17, 2010

கண்டு கலந்து கற்க வா – காதல் - II





இரவின் நெடிய உறவுகளில்
உன் ஹிருதயம் மறைபொருளாய்
மறுநாள் தணியும் சுகம்
கனவில் நீகாண் உள்ளம் எனதாய்

உனது கனவில் வரும் நான்
உனைத்தானே பார்க்கிறேன்
என் கனவில் நீ வருவதை போல்
அதில் உன்னைதான் பார்க்கிறேன்

அப்படியென்றால் நிஜக்கனவு
கனவில்லை நிஜம்
கனவில் நிஜம்

தனித்தனி தீவுகளாயினும்
ஒரே பூமியில் தானே
எண்ண ஓட்டத்திற்கு
நெருக்கம் உண்டு

அரேபியதேசத்தில் மகனுக்கு
காய்ச்சல் என்றால்
கன்னியாகுமரியில் தாய்க்கும்
தகிக்கும் மனது

அது போலதான் நாம்
அது அன்பு – இது காதல்

இனி இரக்கம் என்பது
நமது வேட்டையில் இல்லை
இது காதல் கிறுக்கு
நீ என் காதல் சிறுக்கி

Saturday, February 13, 2010

கண்டு கலந்து கற்க வா – காதல்








கரம் தேட வரம் வேண்டும் அவள் மொத்தமும்

இனி நிற்காது தொடரும் முத்த சத்தம்



பின்னி பிணைந்த ஆன்மாக்கள் ஒன்றாக வேண்டும்

இனி செத்தாலும் பிழைத்தாலும் உன் மடிவேண்டும்



அவளை நினைக்கும் போதே இனிக்கிறது

அவளருகில் இருக்கையில் மரிக்கிறது காலம்



கண்டு கலந்து கற்க வா – காதல்



அவளைக் கண்டு கலந்து அனுஅனுவாய் கற்க ஆசை

விழையும் மனம்

சுண்டும் அவள் கவிதை

சீண்டும் என் மனதை

ருத்திரமாகயிருந்த மனம்

பொங்கும் ரௌத்திரமாய்



சிந்தை முழுக்க வளம் வருகிறாய்

எனை வெற்றிக் கொண்டவளாக



நாமும் சிதைந்து எரிவோம் ஆழி தீயென

உள்ளக்குமுறள்கள் பிரிவின் வேதனைகளை சுட்டு எரிக்கிறேன்

இனி வலம் வருவோம்

உலகை, உள்மத்தங்களை





தனித்து தவம் செய்துக்கொண்டிருந்தவன் நான்

தாகம் தனிக்க வந்த பேரானந்தம் நீ



சுகந்து வந்த தேவதை நீ

கொடுத்துவிடு உன் இதயம்

அல்லது கொய்துவிடு என் தலையை



மரண புத்துகளில் நெளியும் கருநாகம்போல

அசைகிறது உன் தனிமை என்னிடம்

நீ உணரக்காண்பாயோ

உன் சூல் கொண்ட மார்பும்

வேல் போன்ற கூரிய விழிகளும்



வார்த்தை பிசாசுகள்

கண்மண் தெரியாமல்

பாலைவன புயலைப்போல்

அடித்து நொறுக்கிறது எனை

(தொடரும்)

Friday, February 12, 2010

அற்ற




வார்த்தைகள் மறுகும்போது
எழுத தொடங்கி !
வார்த்தைகள் தீர்ந்தபின்
வேலையை பார்க்க!

இடைப்பட்ட நேரத்தில்
துலாவியபொழுது
ஊற ஆரம்பித்த
வார்த்தைகள் அத்தனையும்,
எனதல்ல - என
புரிந்த நொடியில்
மறைய தொடங்கின,
ஏற்கனவே சொல்லியும்விட்ட,
வார்த்தைகள்!

Friday, January 29, 2010

வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்

வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்


புத்தக வெளியீடு பலபேரை சென்றடையவேண்டும் அவ்வளவே. நண்பர்கள் உடனே எல்லோருக்கும் தெரிவிக்கவும். நன்றி

Wednesday, January 20, 2010

வெறுமையும் நானும் - பரவசம்

வெறுமை தரும் சூழல்
தாண்டிச் செல்கையில் சூழ்வெறுமை
கூட்டம் தேடி.. கூட்டம் அடைந்தும்
ஓம்காரம் தாண்டியும் குழந்தைவழிசெல்ல
துள்ளி விளையாடிய மழலை அமைதியாய்
கடலின் நுரைக்கும் அலைகளின் முன் தொட்டு
அவனுக்கென கைகோர்த்து திரும்பி பார்க்கையில்
எனக்கு பிடித்தவர் வெள்ளை தொப்பியுடன்
எழுந்து கொள்ள இரு பிரிவாய் நின்று சிறு நேரம்
பேசிக்கொண்டிருந்து கண்பார்வையில் மேலேறி சென்றனர்
திரும்ப வந்து துப்பாக்கியில் 4 பலூனை சுட்டு தீர்க்கையில்
திரும்பி வந்த ஷங்கரிடம் பேசிவிட்டு மிஸ்ட்டு கால் கேபிளுக்கு
டீக்கடை பார்த்துவிட்டு குழந்தையோடு வீடு திருப்புகையில்
வெங்கடேஷவரா போளி ஸ்டாலில் பருப்புபோளி
வாங்கும் பொழுது நியாபகத்தில் வந்து போனது
தண்டோராவின் இன்றைய பதிவு
வீடு வந்து ஆபிஸ் வந்து ப்ளாகை திறக்கையில்
வால் பையனின் ‘பொது புத்தி’ இப்படியாக
தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி
எனக்கு மட்டும் வெறுமையாய்
வெறுமைதரும் கனமற்று

Saturday, January 16, 2010

அலை சித்திரங்கள்




நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான்
போகிறது வழக்கம்போல்,
புரியாமல் மௌனமாய்
பார்த்துவிட்டு கடந்துபோகிறேன்
ஒவ்வொரு முறையும்

வாழ்க்கை சித்தரத்தில்
எத்தனை மாயக்கோடுகள்

தொடக்ககோடும் முழுமைபெற்ற
கடைசிகோடும் மறந்துப்போய்
மௌனமாய் சிரிக்கும் ஓவியம்

Scene 153 short no:82 Take 2

நுரைத்துவரும் அலைகள்
ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறது
என்னுள் இருக்கும் அகங்காரத்தை
மௌனமாய் ஏற்று கடந்துபோகிறேன்

Wednesday, January 13, 2010

நான் இங்கே அவள் அங்கே



அவள் மடியின்
இதம் இல்லையெனில்
பிடி மரணம் என
காலன் சொல்லியிருப்பான்
அவளைத்தேடி துவங்குகையில்
வெண்பனியில் உறைந்திருக்கும்
அன்பின் நதியை சென்றடைந்தேன்
அவள் உடன் சென்றுவிட
மனம் துடித்தாலும்
தடுத்துக்கொண்டே இருக்கின்றன
உடன் சுற்றங்கள்

தனிமைபோர்வையில்
வழிந்துக்கொண்டிருக்கும்
எங்கள் உடல்கொண்ட மனங்களுக்கு
வார்த்தைகளே போதுமாய் இருக்கின்றன
மனச்சுமைகளை அடித்து நொறுக்க
செல்லமாய் சிணுங்கிக்கொள்ள
அன்புகொள்ள கட்டியிருக்கிக்கொள்ள
நினைவுக்கனவுகளில்

Monday, January 11, 2010

கேபிளை மூக்கில் குத்தவேண்டும், புத்தக கண்காட்சி மற்றும் நித்தியானந்தர்









(D.R.Ashok,பலாபட்டறை ஷங்கர்,வண்ணத்துபூச்சியார்சூர்யா(மெய்ஞானமூடில்), மீன்துள்ளியான், ஜாக்கிசேகர்,அப்துல்லா,காவேரி கணேஷ்,புலவர் புலி, சங்கர், தண்டோரா,மயில்ராவணன், எறும்பு ராஜகோபால்(அடுத்தபடத்தில் ஜாக்கியின் இடத்தை பிடிப்பவர்.. யூத்து..என் டர்ர்ர்ரு கவிஞர்..கேபிள் சங்கர்)
மேலும் பதிவர்களின் போட்டோ லிங்க, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர்.

9-1-10 வழக்கம் போல் லேட்டாக 7.55pmக்கு டிக்கெட் counter இடத்திற்கு சென்றேன். 5 ரூபாய் இல்லாத காரணத்தால் counter இடத்திலே நின்றுயிருந்தேன். பிறகு ஒருவர் பத்துரூபாய் நீட்டி ஒரு டிக்கெட் கேட்க சில்லறையில்லையென்றனர். அவர் இரண்டு டிக்கெட் எடுக்க ஒன்று இலவசமாக என்னிடம் கொடுத்தார் அந்த முகம் தெரியா அன்பருக்கு நன்றி. வாழ்க்கையில் இலவசமாக கிடைத்த முதல் பொருள். 8.10க்கு எல்லோரும் வெளியேறிக்கொண்டுயிருக்கும் போது ஞான் உள்நுழைய வழக்கம் போல் ஜொள்ளிலிட்டுக்கொண்டேதான். தண்டோரா.. கிழக்குன்னா எல்லோருக்கும் தெரியும்ன்னார். ஆனா நான் கேட்ட சில பல பேர்களுக்கு தெரியவில்லை.. அப்புறம் இரு மூரு போன்களுக்கு முறையே 420 அப்புறம் 402 என்று வழிகாட்ட நண்பர்களை சென்றடைந்தேன். வழக்கம்போல சற்று கல்லாய்த்துக்கொண்டு வெளியே வந்தோம். லக்கியும் அதிஷாவும் கலந்துக்கொள்ளாமல் ப்ரவுஷரில் மூழ்கியிருந்தார்கள் நிமிர்ந்துகூட பார்க்காமல்.(காரணம் பதிவு டைப் செய்து கொண்டிருக்கும்போதுதான் தெரிந்ததுக்கொண்டேன்). கேபிள் ’அந்த ஆளு’ என்று என் இஷ்ட எழுத்தாளரை பற்றி கூறினார். அடுத்தமுறை குவார்ட்டர் வாங்கிகொடுத்து மூக்கில் குத்தவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டேன். அவர் கையிலிருந்ததோ காலம் தப்பிய ஒரு இயந்திர புத்தகம். அவரது மார்டனஸ்ட் மற்றும் வெஸ்ட்ர்னிஸ்ட்டு ஒழுத்தாளரின் புத்தகம் அட ராமா. தண்டோராவின் கையிலிருந்த மூன்று நகுலன் புத்தகத்திற்கு குறி வைத்தேன். ரொம்ப உஷாரவே இருந்து தொலைத்தார். இனி படித்து தொலைவார்.
நண்பர்களை குடிக்க அழைத்தேன். யாரும் வரவில்லை என்பது ஆச்சரியம். (என்ன இலக்கியவாதி இவங்க) கடைசியில் ஆட்டோ ஓட்டுனரோடு சரக்கடித்து அன்றைய நாளை முடித்துவைத்தேன். ஆட்டோ 300 சரக்கு 167 = Rs.467.(மொத்தசெலவு)

வீட்டுக்கு வந்த பிறகு இன்னும் படிக்காமல் அடுக்கி வைத்துயிருக்கும் புத்தகங்கள் எனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது சித்தப்பு புக் ரிலிஸ் போது வாங்கிய கூடுதல் நாலு புத்தகங்களும் சேர்த்து. சித்தப்பு உங்க புத்தகம் படிச்சிட்டேன்.

மறுநாள்(10.01.09) மாலை நான்கு மணிக்கு நேரம்(மிகவும் அரிதாக 20 வருடங்களுக்கு ஒருமுறை) கிடைத்தது நேராக போன இடம் நித்தியானந்தரின் நிகழ்வுக்கு. ஓஷோ, ஜேகே, மஹாபெரியவர், விசிறி சாமியார் என்று சந்திக்க நினைத்தவர்களை ஒருவரைகூட பார்ததில்லை. இவரை பார்த்தது சந்தோஷமே. நித்தியானந்தரின் பேச்சு நன்றாகயிருந்தது. நடுநடுவே ஜோக் அடிச்சார்.(ஓஷோவின் நியாபகம் வராமல் இல்லை) ஏதோ ஒரு நல்ல உணர்வு இருந்தது. வரும்போது குடிக்க தோன்றவில்லை(அது முன் தீர்மானித்ததுதான்).(டாஸ்மாக் சாத்திவிட்டான் என்பது வேறுவிஷயம்) இரவு 3.30 மணிக்கு(அதிகாலை) தான் தூக்கமே வந்தது. நாளைல இருந்தது regulara செய்ய வேண்டியதை ரெகுலரா செய்யவேண்டும் என்ற வாழ்வின் தத்துவம் புரிந்தது. 16 வருட சரக்கு வாழ்க்கையில் ஒரு நாள் குடிக்காமலிருந்தது ஆச்சரியமே. அதுவே இந்த பதிவேழுத(உங்களை கொல்ல) தோன்றிய அறிய விஷயமும் கூட. வாங்கிய புத்தகம் பெயர் ’ஜீவன் முக்தி’. தள்ளுபடி விலை 150 அசல் ரூ.300. கழுத்து மாலை Rs.100(தட்ஸ் டூமச்)

பின்குறிப்பு: இரு நாள் சாயந்திரமும் பிஸியாக! இருந்ததால் சாட்டிங்கில் வரமுடியவில்லை என்று தோழிகளுக்கு(தோழர்களுக்கு: அது ரொம்ப முக்கியம்) தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, January 8, 2010

அகமகிழ்தல்



மலர்ச்சியா இருந்தது
பேருந்தில் நண்பனை பார்த்ததும்
எடுத்தவுடன் சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்தான்
பேச்சுகள் இடம் மாறிக்கொண்டேயிருந்தது
ஜன்னல் வழி செல்லும் கிராமங்களாய்
சாருவும் ஜெயமோகனும் வந்துபோனார்கள்
ஓஷோ, ஜெகே, தர்க்கம் செய்தனர்
கவிதையில் தாகூர் நகுலன் என மாறி
டக்கென்று பிரமீளிடம் மையம் கொண்டோம்
நிறுத்தம் வரவே பிரியாவிடை பெற்று
நடக்க துவங்குகையில் ஏதோ உறைத்தது
மல்லாட்ட பையும் கரைச்ச நுங்குவும்
பஸ்ஸோடு போயிருந்தது

ஒன்றுக்கும் லாயக்கில்லை எனச்
சொல்லபோகும் வார்த்தைகளை
மனசுக்குள் முன்மொழிந்துக்கொண்டே
நடந்தது கால்கள் வீடுநோக்கி

பிறிதொரு ஆறு மணிநேர
பேருந்து பயணத்தில்
நண்பனை கண்டதும்
மலர்ந்து எழுந்தது நெஞ்சம்
இம்முறை அவன்
ரூஷ்ய புரட்சியில் ஆரம்பித்தான்

Thursday, January 7, 2010

உணவின் சுருதிபேதங்கள்




1. என் பேச்சை அவள்
எப்போதும் கேட்பதில்லை
மீன் குழம்புவையடி என்றால்
கடங்காரி வழக்கம்போலவே
தேன் குழம்பே வைக்கிறாள்


2. பரிமாறும் பூபோன்ற
சுடான இட்டிலியில்
கைவைக்கும்போதெல்லாம்
சட்டென அவள் கன்னம்
உணர்கிறேன்

கன்னத்தில் ஊறுகையில்
இட்லியின் ஸ்பரிசம் வந்தமைகிறது
அவளிடம் மட்டும் சொல்லுவதில்லை
இட்லியும் கன்னமும்
ஒன்றேயென

3. ஹட்சன் அண்ணபூரனா தயிர்கள்!
ஆவின் மற்றும் பிற பால்
வழி வந்த தயிர்சாதம்,
சரவணபவன்! கணேஷ்பவன்!
தயிர்சாதம், என
ருசி பேதங்கள்
எப்போதும் இட்டுச் செல்லும்
ஆச்சரியங்களை.... !

Sunday, January 3, 2010

தமிழ்மண விருதில் இரண்டாவது கட்டத்தில்




தமிழ்மணம் விருதுகள் போட்டியில் எனது பதிவு ’தந்தியற்ற வீணை’ இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஓட்டளித்த அனைத்து சகபதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். கவிதை போட்டி பிரிவில் நான் வரவில்லை பா.ரா(சித்தப்ஸ்) மற்றும் நர்ஸிம் போன்ற பெருமுதலைகள் ஒரு காரணம். ஆதலால் வேறோரு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டயிருப்பது சந்தோஷத்தை தருகிறது.

பிரிவு: தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்

1. வாக்குமூலம்...... - வாக்குமூலம்.....
அவர்கள் !!
2. இந்தியன் (Hindusthani) - veerantamil
திரு. அம்பேத்காரின் சாதனையும் உலக புரட்சியின் வித்தும்
3. புகலி -
நான் ஒரு கறுப்பினத்தவன், நான் ஒரு கறுப்பினத்தவனாகவே இருப்பேன்
4. Ponnusamy - பொன்னுசாமி
ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?
5. அறிதலில் காதல் - D.R.Ashok
தந்தியற்ற வீணை

6. செவ்வாய்க்கிழமை கவிதைகள் - Sai Ram
தலித்தை கொளுத்தினார்கள்
7. கனவுகளே - SUREஷ் (பழனியிலிருந்து)
விலைமகளே பரவாயில்லை
8. சொல்லும் செயலும் ஒன்றே - பி.ஏ.ஷேக் தாவூத்
சாதி ஒழிப்பு: இஸ்லாமே தீர்வு


அடுத்த கட்டத்திற்கு நகர நண்பர்களே ஓட்டளிக்க இங்கே.