Friday, July 10, 2009

வாரக்குறிப்புகள்

படிக்கவே இந்த ப்ராணன் போதாது
பின் எப்படி எழுத?

வர வியாழனாவது பாபா கோயிலுக்கு
போகனும்!

மனைவியிடம் உளறிக்கொட்டி
மாட்டிக்கொள்ள கூடாது

அனுஜன்யா, வீணாபோனவன் இவர்களைவிட
நல்லா கவித எழுதனும்!

சாருவ படிக்கறத விடனும்
சரக்கு அடிக்கறத விடனும்

என்னபன்னறது

முதல் சா மனசுக்கு ருசி
இரண்டாவது ச உடம்புக்கு சால்சா

எல்லோரடையும் அன்பு
(ஆனா நிறைய பேர் வெத்து பந்தா காட்றாங்களே)

__க்கவும்
குளிக்கவும் அவகாசம்

எப்போது சாத்தியமோ
அப்போது மழை!

சுளுக்கும் கொசுக்கடியும்
இல்லா கலவி

எல்லா கோப்பைகளும்
இந்திய கிரிக்கெட் அணிக்கே

குழந்தைகள் சாகாத போர்கள்

வியாதி இல்லா உடம்பு

// கடைசிவரை சுயமாய்
நீர்கழிக்கும் சுகம்

உறக்கத்தில் உயிர்பிரியும்
வரம் //

(வைர வரிகளை 100% ஒத்துப்போகிறேன்)

11 comments:

Ashok D said...

ஓட்டு போட்ட மகாஜனங்களே.. உங்கள் எண்ணங்களை பின்னோட்டமாக போட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்

வால்பையன் said...

//அனுஜன்யா வீனாபோனவன் இவர்களைவிட
நல்லா கவித எழுதனும்!//

அனுஜன்யாவுக்கும், வீணாபோனவனுக்கும் இடையே கமா போடுங்க தல, இல்லைனா அனுஜன்யா வீணாப்போனவர் ஆகிருவாரு!

Ashok D said...

ஹிஹி சரி அருண்

தேவன் மாயம் said...

நல்ல வேண்டுகோள்!!

Ashok D said...

வாங்க தேவன் மாயம்

இரசிகை said...

(வைர வரிகளை 100% ஒத்துப்போகிறேன்)

ninapputhaan polappak kedukkuthu..:)

but,ithu nalla muyarchi...

Ashok D said...

@ இரசிகை

//ninapputhaan polappak kedukkuthu..:)//
எந்தெந்த நினப்புங்கோ??

but,ithu nalla muyarchi...

நல்ல முயற்சி ஆனா கவித இல்லன்னு சொல்லிறிங்க.. புரியுதுங்க..
ரொம்ப தாங்ஸ்ங்க..

anujanya said...

நல்லா எழுதி இருக்கீங்க அசோக். எல்லா வரிகளையும் ரசித்தேன்.

ஆனால், விளையாட்டுக்குக் கூட முகுந்த் அருகில் என் பெயரைப் போடாதீர்கள். அவர் இருக்கும் இடம் வெகு உயரம். ஒரு போலி பணிவில் சொல்லவில்லை. இங்கு பதிவுலகில் இருக்கும் எல்லோருக்கும் இது தெரிந்த விஷயம்.

அனுஜன்யாவை விட இந்த கவிதையிலேயே நல்லா எழுதி விட்டீர்கள் :)

அனுஜன்யா

Ashok D said...

@அனுஜன்யா
//நல்லா எழுதி இருக்கீங்க அசோக். எல்லா வரிகளையும் ரசித்தேன்//
நன்றி தல.

//விளையாட்டுக்குக் கூட முகுந்த் அருகில் என் பெயரைப் போடாதீர்கள்//
மன்னிச்சிக்கோ வாத்தியாரே

//அனுஜன்யாவை விட இந்த கவிதையிலேயே நல்லா எழுதி விட்டீர்கள்//
இது கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவர்ன்னே.

பா.ராஜாராம் said...

இதுவும் நல்லா இருக்கு அசோக்.

Ashok D said...

இதற்கும் நன்றி பா.ராஜாராம் சார்.