Wednesday, July 22, 2009

வாழ்வின் அதிசயத்தை வியந்தபடி




சில நாட்களாய் பல மணிநேரம்
தொலைபேசியில் தொடர்ந்து
அவளோடு பேசியபின்னும்
பேச வேண்டிய விஷயங்கள்
நிறைய மிச்சமிருந்தன

மனம் பொங்கி,
உள்ளுக்குள் சிரித்து
முகம் மலர – காரணி!
காதலா? அவளா?

சுகானுபாவனாய் சிந்தித்தே
பித்துபிடித்து கிடப்பது
எப்படி சாத்தியமாகிறது
ஏனிந்த சுய மோகம்!

வியாதி, மனம்,
உடல், ஆத்மா
கடவுள் அனைத்தையும்
கடந்ததோ இந்நிலை


தொடர்ந்து காதலிக்க ஆசை
வந்து மிரட்டுகிறது
ரொட்டி சுடும் கட்டையுடன்
மனைவியின் பிம்பம்

16 comments:

அகநாழிகை said...

கவிதை நல்லாயிருக்குங்க.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

தேவன் மாயம் said...

முதுகில் டின் தான் மக்கா!!

Ashok D said...

@“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

உங்கள் முத்ல் வரவுக்கு நன்றி. உங்க பெயரும் அப்புறம் வடகரைவேலன் சார் பெயரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


@தேவன்மாயம்

//முதுகில் டின் தான் மக்கா!!//
அதான் அடக்கி வாசிக்க வேண்டியிருக்குது மக்கா!!

Anonymous said...

nalla irukku

mankuthiray

Ashok D said...

நன்றி மண்குதிரை

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க.

:)

Ashok D said...

வாங்க நேசமித்தரன்.. உங்க கவிதைகளை படித்தேன்... அதுக்கு knowledge வேனும் போலயிருக்கு.. சுஜாதா ஆவிய கூட்டிட்டு வர்றேன்

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு .

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Ashok D said...

@பிரவின்ஸ்கா

நன்றி பிரவி

அதே ப்ரியத்துடன்
D.R.அஷொக் :)

anujanya said...

நல்லா இருக்கு அசோக். ரொம்ப நாட்களுக்குப் பின் வரதால, எனக்கு உங்க கவிதைகள் எல்லாமே please surprise.

தொடர்ந்து வாசித்து, எழுத்துகள் அசோக்.

அனுஜன்யா

Ashok D said...

@ அனுஜன்யா

//எனக்கு உங்க கவிதைகள் எல்லாமே please surprise//

ஒரு half உள்ள போனா மாதிரியிருக்கு, இதுமாதிரி டானிக் வார்த்தைகள் அடிக்கடி வந்து பிளாக்கில போடுங்க. அப்புறம் நான் எழுதறது கவிதையின்னு வேற சொல்லிட்டடிங்க. ரொம்ப நன்றி. நிறைய வாசிக்க முயற்சிக்கிறேன். நல்ல எழுதவும்.. :)

anujanya said...

I meant 'pleasant' surprise. Very happy to see you writing good poems Ashok. Please excuse English font.

Anujanya

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு அஷோக்.

Ashok D said...

@ பா.ராஜாராம்

நன்றி ராஜா சார்

விநாயக முருகன் said...

தொடர்ந்து காதலிக்க ஆசை
வந்து மிரட்டுகிறது
ரொட்டி சுடும் கட்டையுடன்
மனைவியின் பிம்பம்

:)

ரசித்தேன் நண்பா

Ashok D said...

@ என்.விநாயகமுருகன்

அப்பொ நம்ம பயபடறத ரசிக்கிறீங்க. நல்லயிருங்க மக்கா.

நன்றி விநாயகனே...