
இரவின் தூக்கத்தில்
விழித்திருக்கிறது நெடிய வானம்
பிரித்து பார்க்கையில்
வாழ்விலில்லை சுகந்தம்
வனமான வாழ்வு
சொல்லும் நிறைவுறாத தேடல்
தேடல் என்பதும்
நிறைவுறாத வானம்
வாழ்வே ஒரு கொடும் கனவு
புணர்தலும்
புரிதலும்
செறிவுறாத
சாலை நோக்கி நகரும்
தேகம்...
உயிரெடுப்பதும்
உடல் சுருங்குவதும்
கானக்கிடைக்காத தங்கம்
தகரமும் தங்கமும்
உயிர் உடைத்த
EQUIVALENT
புரிதலும்
சிதறுதலும்
ஒன்றே
14 comments:
Nice
தகனத்திற்கு பின்னும்
துளிர்விட தூண்டும்
வாழ்வியல்..
புரியக்கிடைத்து
சிதறும் தேகம்.
அருமை நண்பரே.
//இரவின் தூக்கத்தில்
விழித்திருக்கிறது நெடிய வானம்
பிரித்து பார்க்கையில்
வாழ்விலில்லை சுகந்தம்//
மிகவும் ரசித்தேன்
இதற்குப்பிறகான வரிகளுக்கு செல்ல நேரம்பிடித்தது அஷோக்ண்ணா
அன்பை கொலை செய்து வாழ்ந்தால் இப்படித்தான் தோன்றுமாம் நீங்க யாருடைய அன்பை கொன்றீர்கள்?
Really Nice!
true
அஷோக்கு...ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு பாத்து வந்தேன்.சந்தோஷமா இருக்கணும் !
@காஞ்சனா
நன்றிங்க
@ச சங்கர்
அட இதுவும் நல்லாயிருக்குங்க சங்கர்.. :)
@வசந்த்
இரண்டும் துருவங்களே :)
@ச.முத்துவேல்
தேங்ஸ்பா
@பத்மா
true marieதான் உங்களுக்கு பிடிக்குங்கலா.. சரிங்க
@ஹேமா
என் சுவிஸ் அக்கௌண்ட்ல ஒரு 200 கோடிய போட்டுங்க.. சந்தோஷம் தானா வந்துட போகுது :) (கூட சிபிஐயும் வருமே)
@D.R.Ashok
சீரியஸா எழுதிட்டு .. காமடி பண்ணற...?
பதில்: அது வேறு நிலை.. இது வேறு நிலை
ரைட்டுங்ணா...
/////////புரிதலும்
சிதறுதலும்
ஒன்றே///////
வனமும் வானமும் சேர்ந்திருக்கும் புள்ளியில் இருக்கிறது ஒரு சூட்சம கவிதை. அதன் நிறங்களில் மகிழ்ச்சி மட்டும் இல்லை.
தங்கமும் தகரமும் ஒண்ணுதானே..:)) மெட்டல்ஸ்..
ஜிவ்வுன்னு ஒரு தத்துவ பயணம்!
நல்லாருக்கு மகன்ஸ். :-)
@க.பாலாசி
தேங்ஸ்ங்ணா :)
@சாய்ராம்
சரிதான் சாய் :)
@தேனம்மை
உட்டா கமாடிட்டுன்னு சொல்வீங்க போல.. எனக்கு உங்க லொள்ளு புடிச்சிருக்குஜி :)
@சித்தப்ஸ்
நன்றி தல :)
அருமை.....!
கானக்கிடைக்காத/காணக்கிடைக்காத ? கவிதை சூப்பரு.
Post a Comment