Saturday, May 23, 2009

புலப்படாத உள்ளூறிய தடை தரும் வலி




பல சந்திப்புகளில்
காதலாய் கனிந்து நின்றோம்
"வரதட்சனை கொடுக்கமாட்டோம்" அவள்
"கவிஞன் இறந்துண்டு வாழ மாட்டேன்" நான்
"நகை சீருக்கு வழியே இல்லை" அவள்
"சுய சம்பாத்தியவாதி" நான்
கல்யாணமாகும் நெருக்கத்தில்
"சாதி என்ன?" வினவினாள்
சொன்னேன்...
இரு தினம் சென்று போனித்தாள்
"வீட்டில் வேண்டாம் என்கிறார்கள்" அவள்
ஊமையாகி நின்றேன்!
நட்பு வட்டத்தில் மிகுந்த தன்னம்பிக்கைவாதியாக
கருதப்பட்ட நான்!