Saturday, May 30, 2009

அன்பு... சுமையா?சுகம்மா? இரண்டுமா?


புத்திரன்
கொடியது கொடியது அன்பு கொடியது
தேள் கொட்டி பரவும் விஷமது
ஐந்து வயது குழந்தையை அதன்
தாயிடம் கொண்ட முறிவாள் பிரிந்து...
பிரிந்தே ஒவ்வொரு நொடி இறந்து...
நொந்து.... காலம் மறந்தே துடித்து..
கொடியது கொடியது அன்பு கொடியது
மார்பிளக்கும் விஷமது


சுமை
கிழிசல் சட்டை
சிறுமி ஒருத்தி
குழந்தையும் பையுமாய்
பேருந்து நிறுத்த
வெயில் மாலையில்

”வெய்ட்டா இருக்குமே
என்கிட்ட கொடு” என்றேன்
”வெய்ட்டுல்ல இது
என் தம்பி” என்றாள் வெடுக்கென்று

7 comments:

Cable சங்கர் said...

இரண்டாவது கவிதை சூப்பர்.. அசோக்..

Karthikeyan G said...

2nd one is Superb!!

first one too.. :-)

Ashok D said...

நன்றி கேபிளார், Thanzpa Karthi

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இரண்டாவது கவிதை நல்லாயிருக்குங்க.

Ashok D said...

நன்றி ஜ்யோவ்ஜி... முதல் வருகைக்கு நன்றி... நீங்க பாராட்னது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா எனக்கு

ny said...

கவர்கிறது..
இரண்டாவது மிகவும்!

Ashok D said...

@ karti n

நன்றி Karti