Friday, September 4, 2009

சிதறிய கவிதை துண்டுகள்

சிலர் கவிதை படைப்பதும்
சிலர் கவிதை வெறுப்பதும்
கவிதைதான்

அள்ள அள்ள குறையவில்லை
பாத்திரத்தில் நீர்
மேலே திறந்த குழாய்

குக்கர் குழந்தை
காலிங்பெல் தொலைபேசி
குரல் கொடுக்க எல்லாவற்றுக்கும்
மறுகுரல் கொடுத்தாள்
மனைவி

சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி

புரிதலை நோக்கி
சிந்திக்கொண்டிருக்கும்
மழை மனது

மழை பரப்பும்
வாசனை திரவியம்

திட்டு திட்டாய்
வெளிச்ச வானமாய்
கருமேக கூட்டம்

மண்னை நனைத்து பின்
மேலோடி போகும்
நீர் போல

சுவைத்து சப்பிய
மாம்பழக் கொட்டை

19 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//மண்னை நனைத்து பின்
மேலோடி போகும்
நீர் போல

சுவைத்து சப்பிய
மாம்பழக் கொட்டை //

எக்ஸலண்ட் உதாரணம்

சூப்பர்ப்......

Vidhoosh said...

///சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி///

super.

-vidhya

மண்குதிரை said...

sinnachchinnathaa ahaka irukku

ezhuthungkal nanbaree

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Ashok D said...

@ சந்தான சங்கர்

வித்தியாசமான அனுகுமுறை.
மேம்பட வாழ்த்துக்கள். நன்றி சங்கர்.

@பிரியமுடன்..வசந்த்

இரண்டும் தனித்தனி சிதறல்கள் தான்
நன்றி வசந்த்

Ashok D said...

@ விதூஷ்

///சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி///
super.//

எனக்கும் பிடித்தமான வரிகளில் ஒன்று. நன்றி விதூஷ்

Ashok D said...

@ மண்குதிரை
//sinnachchinnathaa ahaka irukku

ezhuthungkal nanbaree//

நன்றி மண்குதிரை. ஏதோ சுமாரா எழுதரனா?

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு அசோக்.அவ்வப்போதான தருணங்களுடன் கவிதையை கலக்கவிடுவது உங்களின் தனி சிறப்பு.ஏதோ சுமாரா இல்லை.நல்லாவே எழுதுறீங்க.தனித்த அடையாளம் இருக்கு.கொளுத்துங்க!

க.பாலாசி said...

//புரிதலை நோக்கி
சிந்திக்கொண்டிருக்கும்
மழை மனது//

ஆகா...அருமை...

//மழை பரப்பும்
வாசனை திரவியம்//

நல்ல மனம்...

அழகான கவிதை...வாழ்த்துக்கள் அன்பரே...

Ashok D said...

@ பா.ராஜாராம்
//ரொம்ப நல்லா இருக்கு அசோக்.அவ்வப்போதான தருணங்களுடன் கவிதையை கலக்கவிடுவது உங்களின் தனி சிறப்பு.ஏதோ சுமாரா இல்லை.நல்லாவே எழுதுறீங்க.தனித்த அடையாளம் இருக்கு.கொளுத்துங்க!//

என் வாழ்தலுக்கான அர்த்தத்தை கொடுக்கிறது உங்கள் பின்னோட்டம். மிகுந்த வலிமையும் எழுத்தின்பால் காதலும் உண்டாகிறது. இரு கை கூப்பி ஏற்றுக்கொள்கிறேன்.

Ashok D said...

@க.பாலாஜி said...

//புரிதலை நோக்கி
சிந்திக்கொண்டிருக்கும்
மழை மனது//
எனக்கு பிடித்த முக்கிய வரியை நீங்கள் பிடித்துவிட்டீர். 2டை விதூஷ் பிடித்தார்.

//மழை பரப்பும்
வாசனை திரவியம்//
வாசனை பிடித்த பாலாஜிக்கு நன்றி.

வால்பையன் said...

//அள்ள அள்ள குறையவில்லை
பாத்திரத்தில் நீர்
மேலே திறந்த குழாய்//

ரசிக்கபடியான ஹைகூ!

Ashok D said...

@ வால்பையன்

//ரசிக்கபடியான ஹைகூ!//

சிலசமயம் வாழ்வே
ரசிக்கும்படியான
ஹைகூவே வால் :)

Shakthiprabha (Prabha Sridhar) said...

//சிலர் கவிதை படைப்பதும்
சிலர் கவிதை வெறுப்பதும்
கவிதைதான்//

அடடா! கவிஞரா :D !

நல்லா இருக்கு :)

//அள்ள அள்ள குறையவில்லை
பாத்திரத்தில் நீர்
மேலே திறந்த குழாய்//

ஆழ்ந்த அர்த்தம் இருக்கு.

//குக்கர் குழந்தை
காலிங்பெல் தொலைபேசி
குரல் கொடுக்க எல்லாவற்றுக்கும்
மறுகுரல் கொடுத்தாள்
மனைவி//

இதுக்கும் (ஆழ்ந்த அர்த்தம்)... 4 வரியில் அலசி, பெண்ணியத்தையே பேச வைத்துவிடுவீர்களோ!

//சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி//

பால்மழைக்கு ஏங்கும் பூமியில்லையா :P

//மழை பரப்பும்
வாசனை திரவியம்

மண்னை நனைத்து பின்
மேலோடி போகும்
நீர் போல
சுவைத்து சப்பிய
மாம்பழக் கொட்டை//

அரித்துச் செல்லுதலின் அழகு! ரொம்ப வித்யாசமா யோசிச்சிருக்கீங்க.

நல்லா இருக்கு.

Ashok D said...

@ shakthiprabha

ரொம்ப சரியா புரிஞ்சிட்டீங்க....

உங்கள் நுட்பதிற்க்கு மிகவும் நன்றி...

உண்மையிலே நீங்க பெரிய கவிஞரா இருப்பிங்கன்னு நினைக்கறேன்..
தொடர்ந்து வாங்க...

என் முதல் வரிகளை புரிந்துக்கொண்டதற்கு special நன்றி

பிரவின்ஸ்கா said...

//
சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி
//

நல்லாருக்கு

- ப்ரியமுடன் ,
பிரவின்ஸ்கா

Ashok D said...

@ வாங்க பிரவி

பார்த்து நாளாச்சு...
நன்றி பிரவின்ஸ்கா :)

இரசிகை said...

//சிலர் கவிதை படைப்பதும்
சிலர் கவிதை வெறுப்பதும்
கவிதைதான்//
!
//அள்ள அள்ள குறையவில்லை
பாத்திரத்தில் நீர்
மேலே திறந்த குழாய்//
:)
//சந்திப்பை நோக்கி
காத்துக்கொண்டிருக்கும்
கோடை பூமி//
mazhaikkuththaane?

//புரிதலை நோக்கி
சிந்திக்கொண்டிருக்கும்
மழை மனது//
sabaash...
//மழை பரப்பும்
வாசனை திரவியம்//

kaith thatteeten....:)

//மண்னை நனைத்து பின்
மேலோடி போகும்
நீர் போல

சுவைத்து சப்பிய
மாம்பழக் கொட்டை//

puthusaa irunthathu...

vazhththukkal...

Ashok D said...

@ ரசிகை


//mazhaikkuththaane?//
அதில் என்ன சந்தேகம், மழைக்கு தான் காத்திருக்கிறது கோடை பூமி


kaith thatteeten....:)//

கை தட்டிட்டேன்???



ரசித்தற்கும் ரசனைக்கும் ரசிகைக்கு நன்றி :)